"மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் காடுகளும், அங்குள்ள உயிரினங்களும் இயற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அரிய வரங்கள். அவற்றை நாம் இழந்து விடக்கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதற்கான பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்,'' என்கிறார் காளிதாசன்.
இயற்கை பாதுகாப்புக்காக ஓங்கி குரல் கொடுக்கும் "ஓசை' அமைப்பின் நிறுவனர் இவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் இயங்கி வரும் "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பு, வனம் மற்றும் வன உயிர்களின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுச்சூழலின் மகத்துவம் பற்றியும் மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏராளமான செய்திகளை எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள் என பல ஆயிரம் பேர், இவ்வமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு, சூழலைக் காக்கப் போராடி வருகின்றனர். மாதந்தோறும் "சூழல்-சந்திப்பு' என்ற பெயரில் சூழல் சொற்பொழிவையும், ஆண்டுதோறும் "உயிர் நிழல்' என்ற கானுயிர் புகைப்படக் கண்காட்சியையும் இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.