கோயம்புத்தூர்னாலே "காஸ்ட்லி சிட்டி' என்பது ஊரறிந்த விஷயம்; அதிலும் "ரிச்' ஆன ஏரியா எதுவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்கும். கோவையின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ரேஸ்கோர்ஸ் பகுதி, குடியிருப்புப் பகுதிகளிலேயே மதிப்பு மிக்க பகுதியாக இன்று வரை கோவைவாசிகளால் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பகுதியில்தான், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஐ.ஜி., மாநகர காவல்துறை கமிஷனர், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள், பெரும் தொழிலதிபர்களின் இல்லங்கள் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இந்தப் பகுதியும் வணிக மயமாகி வருவது வேதனைக்குரிய உண்மை.
ஒரு காலத்தில் உயர்ந்த இடமாகக் கருதப்பட்ட இந்தப் பகுதி, விரைவில் அமலுக்கு வரவுள்ள வழி காட்டி மதிப்பில், கொஞ்சம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் கருத்தைப் பெறுவதற்காக, இணையதளத்தில் பதிவுத்துறை
வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டி பதிவேட்டின்படி, கோவையின் "காஸ்ட்லி ஏரியா'க்களாக கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இதற்குக் காரணம், இந்த வீதிகளில் இடம் எதுவும் காலியாக இல்லை என்பதுதான். இந்தப் பகுதிகளில், ஒரு சதுரடி 13 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரேஸ்கோர்ஸ், பெரியகடை வீதி, ஸ்டேட் பாங்க் ரோடு ஆகிய இடங்களில் சதுரடி 10 ஆயிரமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, நஞ்சப்பா ரோடு, நூறடி ரோடு ஆகிய பகுதிகள், இதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. குனியமுத்தூர் ஆதிசக்தி நகர் (சதுரடி 300 ரூபாய்), குறிச்சி அண்ணாபுரம் (சதுரடி 350 ரூபாய்) போன்ற புறநகர் பகுதிகள், விலை மதிப்பு குறைந்த இடங்களாக உள்ளன. இதனை விட விலை குறைவாக, ஆனால் பதிவு செய்யப்படாத பல இடங்களும் இருக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.