பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளிவருகிறது ஒரு ஆட்டோ, அந்த ஆட்டோவை ஒட்டிவருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணைப் பார்த்து பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி தனது பயணத்தை தொடர்கிறார்.
இவரது இந்த ஆட்டோ ஒட்டுனர் பணி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல் இவர் காக்கி சீருடையை கழட்டிவைத்துவிட்டு கறுப்பு கவுனை மாட்டிக்கொண்டு கோர்ட்டிற்கு சென்று வாதாடப்போகிறார்.
இது ஒன்றும் ஒரு நாள் கதை அல்ல அவரது மனதிற்குள் விழுந்த பலநாள் விதை.
பெண் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்தார், படிப்பு செலவு அதிகமானது, கணவரது வருமானம் போதவில்லை, தனக்கு தெரிந்த சமையல் வேலையை மேற்கொண்டார். ஐம்பது, நூறு பேரின் தேவைக்கு, வீட்டிலேயே சமைத்து எடுத்துப்போய் கொடுத்து வருமானம் பார்த்து வந்தார். சமைத்த உணவுகளை எடுத்துப் போகவேண்டிய ஆட்டோ டிரைவர் பல சமயம் வராமல் போய் தொழிலில் சங்கடத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக இவரே ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தார்.
இப்படியே சில வருடங்கள் ஓடியது இந்த நிலையில்தான் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட ரௌடி கும்பல் இவரை தாக்கி, கடத்தி விபச்சார கும்பலிடம் விற்பதற்கு முயன்றது, மிகவும் போராடி அவர்களிடம் இருந்து தப்பிய வெங்கடலட்சுமி உடனே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தன்னைப்போல எத்தனை அபலைப் பெண்கள் இப்படி சத்தில்லாத, உணர்வில்லாத, உயிரில்லாத வாதத்தால் மோசம் போய்க் கொண்டு இருக்கின்றனர் என்று உணர்ந்து அப்போதே தானும் ஒரு வழக்கறிஞராவது என்று முடிவு செய்தார்.
இப்படியான இவரது ஐந்து வருட படிப்பு வீண் போகவில்லை, நல்ல மார்க்குகள் எடுத்து வெற்றிகரமாக எல்.எல்.பி., படித்து முடித்தார், ஆனாலும் பார் கவுன்சில் எக்சாம் பாஸ் ஆனால்தான் கேஸ்களில் ஆஜராகமுடியும் என்ற நிலை, அந்த தேர்வையும் வெற்றிகரமாக முடித்ததன் எதிரொலியாக வருகின்ற மார்ச் மாதம் முதல் கோர்ட்டிற்கு வழக்கறிஞர் வெங்கடலட்சுமியாக செல்ல இருக்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சூழ்நிலை இவரை வழக்கறிஞராக ஆக்கிஇருக்கிரது. . . . .வைராக்கியத்துடன். .இவர் படித்து சமையல் செய்பவர் /ஆடோ ஓட்டுனர் வெங்கடலட்சுமி. . . . . வழக்கறிஞர் வெங்கடலட்சுமியாகி இருக்கிறார். . . . .படித்தால் மட்டுமே. . . .இதை சாதிக்க முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார் . . .படிப்பு . . .கல்வி. . . . அதன் முக்கியதுவத்தை உணர்த்தியதற்கு . . .நன்றி . . .. .இளய சமுதாயத்தினர் இதை புரிந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால். . .நாடு முன்னேறும் . . . நல்ல செய்தி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.