விழுப்புரம் : நாக்கில் முதல்வர் ஜெ., படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் ஒருவர், முதல்வருக்கு நன்றி செலுத்தி வியப்பில் ஆழ்த்தினார். விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 33; ஓவியர். இவர், சிவனார்தாங்கல் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக உள்ளார்.
கண்ணாடியைப் பார்த்தபடி :
நாக்கில் படம் வரைந்த, ஓவியர் செல்வம், ஏற்கனவே இதே போன்று பாரதியார், அப்துல்கலாம் உள்ளிட்டோரின் படங்களை வரைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். தன் ஓவிய கலைத்திறனுக்கு அங்கீகாரம் அளித்ததோடு, வேலை வாய்ப்பையும் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதத்தில், முதல்வர் பிறந்த நாளையொட்டி, அவரது ஓவியம் வரைந்து காட்டியதாக ஓவியர் பெருமிதப்பட்டார். நாக்கில் ஓவியம் வரைந்த செல்வத்திற்கு, அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வென்றிடுவேன் நான் வென்றிடுவேன் என்ற அகத்தியர் சினிமா பட பாடலில், சீர்காழி கோவிந்தராஜன் (அகத்தியர்) , "சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்" என்று பாடுவார். இன்று, , சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட மாணவ மாணவியருக்கு உதவிடும் பல்வேறு அத்யாவசிய பொருட்களை விலையின்றி வழங்குவதன் வாயிலாகவும், ஆசிரியர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவதாலும் அந்த ஓவியர் நமது மாண்புமிகு.முதலவர் அவர்களை சரவச்தியாகும், தம்மை அகத்தியர் போன்றும் உருவகித்துள்ளார். கடவுளே இல்லை எனக் கூறித் திரியும் பகுத்தறிவு பகலவனின் அடியார்களுக்கு இதெல்லாம் விளங்காததால் தான் காட்டுக்கூச்சலிடுகிரார்கள்.
ஆளும் நிர்வாகிகள்/அமைச்சர்கள் தங்களுடைய கடமையைச் செய்கிறார்கள். அதற்கு ஏன் நாக்கை அறுப்பது, ஓவியம் வரைவது, காவடி தூக்குவது, பால்குடம் எடுப்பது போன்ற செயல்கள் என்பது மட்டும் விளங்கவே மாட்டேன்கிறது. அனேகமாக இந்த மனிதர் தனது பணியில் சேரும் அதேனாளன்று இவருக்கு பதவி உயர்வு கிடைத்தால் கூட வியப்படைய முடியாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.