ஈரோடு: பிறந்து, 10 நாட்களே ஆன, ஆண் குழந்தையை,40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, 2 லட்சம் ரூபாய்க்கு, விற்க முயன்ற, ஐந்து பெண்கள் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, கொல்லம்பாளையம் அருகே தாயுமானவசுந்தரம் வீதியை சேர்ந்தவர் பிலிப்ராஜ், 46. இவர், கருங்கல்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் இரவு, நின்று கொண்டிருந்தார். அதேபகுதியில், கையில் பச்சிளங்குழந்தையுடன், நான்கு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.
குழந்தை அழுது கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த பிலிப்ராஜ், நான்கு பெண்களிடம் விசாரித்த போது, "தங்களிடம், பிறந்து, 10 நாளே ஆன, பச்சிளம் ஆண் குழந்தை இருப்பதாகவும், 2 லட்ச ரூபாய் கொடுத்தால், குழந்தையை கொடுப்பதாகவும்' பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு, பிலிப்ராஜ் தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், அப்பெண்களை பிடித்து விசாரித்தனர்.
புரோக்கர்களாக ., விசாரணையில், அவர்கள், ஈரோடு செட்டிபாளையம் அருகே அண்ணாநகரை சேர்ந்த, வத்சலா, 37, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கொள்ளபாளையத்தார் தோட்டத்தைச் சேர்ந்த,பாக்கியம், 40, தங்கமணி, 48, குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த, தேன்மொழி, 36, என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும், ஏழை பெற்றோரிடம் இருந்து, குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாதோருக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்யும் கும்பல் என, தெரியவந்தது. இவர்களுக்கு, ஈரோடு சூரம்பட்டி சரவணன் மனைவி கல்யாணி, நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் அருகே வட்டமலையை சேர்ந்த, சுந்தர்ராஜ், 42, புரோக்கர்களாக செயல்பட்டதும், தெரியவந்தது. குழந்தையை வாங்கி விற்க முயன்ற, ஐந்து பெண்கள் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்து, ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, கருங்கல்பாளையம், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூறுகையில், ""சேலம் மாவட்டம், ஓமலூர் புளியம்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி தங்கவேலுக்கு, பிறந்த ஆண் குழந்தையை, 40 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி, சுந்தராஜ், கல்யாணி வாங்கி வந்துள்ளனர்.குழந்தையை விற்க முயன்ற போது, சிக்கி கொண்டனர். தகவல் அடிப்படையில், ஓமலூரில் உள்ள கூலித்தொழிலாளி தங்கவேலிடம், விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணம் தான், இப்படி குழந்தை விற்பனை அதிகரிப்பின் காரணம். அரபு நாடுகளில், குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. காரணம், அங்குள்ள ஆரோகியமான மற்றும் சத்துள்ள அசைவ உணவு பழக்கங்கள். சிறு வயது முதலே, அங்கே அசைவம் சாப்பிட்டு ஆரோகியமாக உள்ளார்கள். இங்கே தான், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம் பிடித்து, வாரிசு இல்லாமல் உள்ளார்கள்.
குழந்தை இல்லாமல் எதனை பேர் கோவில் மற்றும் மருத்துவமனைகளில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் தெரியுமா .. குழந்தை என்பது கடவுள் டகொடுக்கும் பரிசு... அதை வியாபாரத்திற்கு பயன்படுத்துவது வேதனை.. அந்த தாய் எப்படி ஒப்பு கொண்டார் என்பதுதான் வியப்பு.. காசேதான் கடவுளடா என்று ஆகி விட்டது.. புரோக்கர் பக்கம் எந்த தப்பும் இல்லை.. அந்த பெற்றோரை கடுமையாக கண்டிக்க வேண்டும்..
இது போல திருடர்களால் இப்போது உண்மையாவே குழந்தைகளை தத்து எடுப்பவர்களுக்கு எவளவு கஷ்டம் தெரியுமா நான் ஒருவருடன் போய் அந்த கஷ்டத்தை நேரிலே பார்தேன். அவளவு கடுமையான நடைமுறைகள் அதில் இப்போது பின் பற்ற படுகின்றது பான் கார்டு முதல் சொத்து, வீடு, போன்ற பல ஆவணங்கள் கேட்கின்றார்கள் இது எல்லாம் இல்லாவிட்டால் குழந்தை கொடுக்க மாட்டார்களாம் ஆனாலும் சில வருஷம் காத்திருக்கவேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.