Advertisement
தமிழ் தாத்தா உ.வே.சா., நினைவு இல்லம் பூட்டிக்கிடக்கிறது: கருணாநிதி குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013,23:24 IST

சென்னை :"திருவாரூரில் உள்ள, உ.வே.சா.,வின் நினைவு இல்லம், முறையான பராமரிப்பின்றி, பூட்டியே கிடக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:நாளை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின், 159வது பிறந்த தின விழா. அவர், மட்டும் தொடர்ந்து முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், சங்க இலக்கியங்கள் நமக்கு கிடைத்திருக்காது. தி.மு.க., ஆட்சியில் திருவான்மியூரில் அமைக்கப்பட்ட, உ.வே.சா.,வின் சிலைக்காக, தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. உ.வே.சா., தபால் தலையை நானே வெளியிட்டேன்.தி.மு.க., ஆட்சியில், உ.வே.சா.,வின் நினைவு இல்லப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அந்த உண்மை தெரியாமல், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, ஜெயலலிதா அப்போது உத்தரவிட்டார்.அ.தி.மு.க., ஆட்சியில், திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள, உ.வே.சா.,வின் நினைவு இல்லம் முறையான பராமரிப்பின்றி, பூட்டியே கிடக்கிறது.அந்த இல்லத்தைப் பராமரிக்க, ஒரு ஊழியர் கூட இல்லாத நிலையில் உள்ளது. இந்த இல்லத்தைப் பராமரிப்பதற்காக இருந்த ஊழியர், பதவி உயர்வு பெற்று, ஓசூர் சென்றதில் இருந்து, அந்த இல்லம் பூட்டியே கிடக்கிறது.

அந்த இல்லத்திற்குப் பக்கத்திலே உள்ளவர்களிடம் பேசும்போது, "உ.வே.சா., வாழ்ந்த வீடு, தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது என்பதால் பராமரிப்பின்றி கிடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் மாணவ, மாணவியரும், இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்' எனத் தெரிவிக்கின்றனர்.இனியாவது, உ.வே.சா., நினைவு இல்லம் மூடிக்கிடக்கிற நிலையைப் போக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (134)
K Sanckar - Bengaluru ,இந்தியா
19-பிப்-201310:18:43 IST Report Abuse
K Sanckar முதலை கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி. ஆட்சியில் இருந்த போது என்ன கிழித்தார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-201303:55:13 IST Report Abuse
Sivakumar Manikandan தமிழ் நாடு இருட்டில் கிடக்கிறது .......அதை பற்றி யோசிக்காமல் ......செத்துப் போனவார ரெம்ப முக்கியம் ..............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kottiyan - Dammam,சவுதி அரேபியா
18-பிப்-201316:28:32 IST Report Abuse
Kottiyan மிலிடெரி ஓட்டலில் போய் இட்லி சாம்பார் கேட்பது போல் உள்ளது , மம்மி ஆட்சியில் உவே சா வை பற்றி பேசுவது - ஒரு தமிழச்சிக்கு உ வே சா வை தெரியும் . மம்மி தமிழச்சி என்று யார் சொன்னது ?
Rate this:
22 members
0 members
60 members
Share this comment
vijikumar.d - Thimmanaicken Palayam,இந்தியா
18-பிப்-201316:10:17 IST Report Abuse
vijikumar.d நாட்டில் எவளவோ பிரச்சனைகள் உள்ளது.தயவு செய்து அதை பத்தி பேசுங்கள்
Rate this:
4 members
9 members
15 members
Share this comment
Raju Rangaraj - Erode,இந்தியா
18-பிப்-201315:53:26 IST Report Abuse
Raju Rangaraj ஜெயலலிதாவே இந்த காரியத்தை கொஞ்சம் முன்பே செய்திருந்தால் , அப்போது அய்யா என்ன சொல்லுவார் ? பார்பனர்கள் இடம் என்றால் ஓடி ஓடி மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறார்கள். இது தான் ஆரிய புத்தி என்பது., திராவிட தலைவர்களையும் இனமான சிங்கங்களையும் ஏன் மறந்தார்கள் என்பது இப்போது புரிகிறதா ? தம்பி நாம் அரசு கட்டிலில் அமரும் நாளே தமிழனின் திருநாளாகும். ஆடி ஓடி பாடு படு எனக்கு பின்னால் ஸ்டாலினும் அவருக்கு பின்னால் பேரன் உதய நிதியும் இருக்கிறான் என்பதை கவனத்தில் கொள் வாழ்க தமிழ்
Rate this:
18 members
0 members
46 members
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
18-பிப்-201315:51:03 IST Report Abuse
Narayan Arunachalam M L A தொகுதி மேம்பாடு நிதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டில் அப்படியே இல்லாவிட்டாலும் தனது மகள் அல்லது மகன் தொகுதி நிதியில் இருந்து செய்யலாமே... அதற்கு மனம் வேண்டுமே.... எப்பொழுதும் வெறும் கையில் முழம் போட்டே பழக்க பட்டவர்...
Rate this:
17 members
0 members
39 members
Share this comment
anu - chennai,இந்தியா
18-பிப்-201315:39:01 IST Report Abuse
anu அண்ணா, எம் ஜி ஆர் , தீப்பொறி ஆறுமுகம், கனிமொழி , குஷ்பூ போன்ற தமிழ் அறிஞர்கள் செய்யாததையா உ வே சா செய்துவிட்டார் தலைவரே? மேலும் அவர் ஒரு பார்ப்பனராயிற்றெ?
Rate this:
27 members
0 members
22 members
Share this comment
Snake Babu - Salem,இந்தியா
18-பிப்-201315:32:21 IST Report Abuse
Snake Babu சிறந்த எதிர் கட்சியாக செயல் படுகிறார் தாத்தா........தாத்தா வ இப்படியே சத்தம் போடுற எடத்துல வச்சிருந்த தமிழகதிற்கு ஓரளவு நல்லது நடக்கும். தமிழ் தாத்தா மேல இரண்டு பேருக்கும் அக்கறை இல்லை அது வேற விஷயம். இப்படி பேசியாவது அவருடைய இல்லத்தை பராமரிச்சா சந்தோசம் தானே. கலைஞர் தாத்தாவ என்ன வேணுனாலும் ................ஊத்துங்க அது தப்பில்ல. அதுக்காக தமிழ் தத்தா உ வே சா வை யாரும் இழிவு படுத்த கூடாது என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி, எவ்வளவு சிரம பட்டு தமிழ் இல்லக்கியத்தை காப்பாற்றியவர். இப்படி அல்லகைகளால் கேவலப்படும் பொது வருத்தமாக இருக்கிறது.
Rate this:
2 members
0 members
44 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
18-பிப்-201315:17:55 IST Report Abuse
Sundeli Siththar தமிழக அரசு செய்யாவிட்டாலும், உங்கள் சொந்த பணம் போடாமல் ( அது எப்பவும் நடக்காது என்பதால் ), எம்.எல்.எ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நீங்கள் பராமரிக்கலாமே...
Rate this:
53 members
0 members
28 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
18-பிப்-201314:53:17 IST Report Abuse
T.C.MAHENDRAN நாளொரு மேனி, பொழுதொரு அறிக்கை விட்டு தமிழர்களை கோமாளியாக்கப்பார்க்கிறார் இந்த கோபாலபுரத்துகாரர்.
Rate this:
26 members
0 members
28 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.