மதுரை: பரமக்குடியில், போலீஸ் விசாரணைக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்த வழக்கில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, நிறுத்தி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பரமக்குடி அருகே காட்டு பரமக்குடியை சேர்ந்த மீன்வள அதிகாரி சாமிராஜ். மனைவி ஆசிரியை பிரேமா. இவர்களது வீட்டில் சோனை மனைவி கருப்பி,45, வேலை செய்துவந்தார். 2002 ல் நவ.,25 ல் வீட்டுவேலை முடித்து, கருப்பி சென்றார். சாமிராஜ் வீட்டில் 16 பவுன் நகை மாயமானது. பரமக்குடி டவுன் போலீசார் கருப்பியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 2002 டிச.,1 ல், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள டவரில், மர்மமாக கருப்பி தூக்கில் பிணமாக தொங்கினார். சி.பி.சி.ஐ.டி.,யினர் விசாரித்து, ராமநாதபுரம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். கருப்பியை தற்கொலைக்கு தூண்டியதாக அப்போதைய இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீதுவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம், அதை செலுத்தத்தவறினால் 2 ஆண்டுகள் தண்டனை, எஸ்.ஐ.,கதிரேசனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், ஏட்டுகள் அர்ஜூனனுக்கு 6 மாதம், ரங்காச்சாரிக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சாகுல்ஹமீது உட்பட 4 பேர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: கருப்பியை, போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவில்லை என முக்கிய சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரை, ஆசிரியரின் உறவினர் தாக்கியுள்ளார். நாங்கள் விசாரணை மட்டும் நடத்தினோம். இதை கீழ்கோர்ட் கருத்தில் கொள்ளவில்லை. கீழ் கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டனர். நீதிபதி அருணாஜெகதீசன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். மனுதாரர்கள் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார். சாகுல் ஹமீது டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். தற்போது ஓய்வு பெற்று, மதுரை எல்லீஸ்நகரில் உள்ளார். எஸ்.ஐ.,கதிரேசன், ஏட்டு அர்ஜூனன் ஓய்வு பெற்றுவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.