புதுடில்லி:தனியார் ஆடம்பர, "ஜெட்' விமானங்களில் உள்ளது போன்ற, அதிநவீன வசதிகள் கொண்ட, ஆடம்பர பஸ், டில்லியில் விரைவில் இயக்கப்பட உள்ளது.
விமானங்களில் உள்ள வசதிகளை போலவே, பஸ்களிலும் இருக்காதா என, ஏங்கும் சாதாரண பயணிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில், டில்லியில், அதிநவீன வசதியுடன் ஆடம்பர பஸ் இயக்கப்பட உள்ளது.அசோக் லேலேண்ட் நிறுவனமும், "டூ பிள்ல்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பும் இணைந்து, இந்த ஆடம்பர பஸ்சை உருவாக்கியுள்ளன. இந்த பஸ்சிற்கு, "அசோக் லேலண்டு லக்சுரா மேஜிக்கல் இந்தியா' என, பெயரிடப்பட்டுள்ளது.இந்த பஸ்சில், குளிர்விக்கப்பட்ட மற்றும் சூடான உணவு வகைகள், நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், குளியலறை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற பல அதிநவீன வசதிகள் உள்ளன.
ஒன்பது பேர் பயணிக்க கூடிய இந்த ஆடம்பர பஸ்சின் வடிவமைப்பாளர், திலீப் சாப்ரியா கூறியதாவது:ஆடம்பர, தனியார், "ஜெட்' விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளை போல, இந்த பஸ்சில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பேர் பயணிக்க முடியும் இந்த வாகனத்தில், விமானத்தை விட குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.காலையில் டில்லியில் இருந்து புறப்பட்டு, ஆக்ரா சென்று, அன்று மாலையிலேயே டில்லி திரும்ப, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.இவ்வாறு திலீப் சாப்ரியா தெரிவித்தார்.
டில்லியை சேர்ந்த மான் டிராவல்ஸ், இந்த ஆடம்பர பஸ்சை சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், இந்த ஆடம்பர பஸ், டில்லியிலிருந்து இயக்கப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.