லண்டன்: பிரிட்டனில், சிறுவனிடம் காண்டம் விற்ற, கடைக்காரருக்கு, பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் எம்மா ஓப்பி. இவர் தன், பத்து வயது மகனுக்கு, கை செலவுக்கு பணம் தந்தார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, மருந்து கடைக்கு சென்று திரும்பிய மகனின் கைகளில், 20 ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்மா ஓப்பி, "காண்டம்' விற்ற, கடைக்காரரிடம் சண்டை போட்டார். இது குறித்து மருந்து கடைக்காரர் குறிப்பிடுகையில்,"" கடைகளில் எந்த வயதினருக்கு ஆணுறை விற்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும், குறிப்பிட்ட வயதினருக்கு ஆணுறை விற்க தடைசெய்யும் சட்டம், பிரிட்டனில் இல்லை. ஆணுறைக்குள் நீரை நிரப்பி, "தண்ணீர் பந்து' போல விளையாடுவான் என்று நினைத்து காண்டத்தை விற்றோம்,'' என்றார். இதற்கு, பிரிட்டன் பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ""குழந்தைகளுக்கு, ஆணுறை விற்பதை தடை செய்யும் சட்டம் ஏதும் இல்லையென்றாலும், இந்த விஷயத்தில், கடைக்காரர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,'' என, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.