மதுரை: மாநகராட்சியில் குடிநீர் பெறுவது, குதிரை கொம்பாக மாறிவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும், அதற்கு ஏற்றார் போல் பிரச்னை வருகிறது. சில மாதங்களுக்கு முன் நீடித்த கடும் மின்வெட்டால், பம்பிங் பணிகள் பாதிக்கப்பட்டன.இதனால், குடிநீரில் சாக்கடை கலந்தது. அனைத்து மண்டலங்களிலும் வேரூன்றிய இப்பிரச்னை, சமீபமாக குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, மீண்டும் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில், குடிநீரை மக்கள் பயன்படுத்த முடியாமல், வீதியில் ஊற்றினர். சித்திரைக்காரத் தெருவில் வந்த நீரை வீணாக்க மனமில்லாத மக்கள், குடங்களில் பிடித்து புழக்கத்திற்கு பயன்படுத்தினர். மதுரையில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நிச்சயம் இம்முறை பழி, மழை மீது தான் விழப்போகிறது. தொழில்நுட்ப கோளாறு என்பதால், அதிகாரிகள் கூறும் குறையை தான் கேட்கவேண்டியுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சில இடங்களில் மழைநீர் தேங்கி, சேதமடைந்த குழாய்களில் கலந்திருக்கலாம். தொட்டிகளில் நீர் தேக்கி பிடிப்பதாலும், இப்பிரச்னை வர வாய்ப்புள்ளது,' என்றார். மழைநீர் வடிகால் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம் முழுமை பெறாத வரைக்கும், குடிநீரில்தான் சாக்கடை வெளியேறும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.