சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வக்கீல்கள், ரவுடிகள்
இடையே நடந்த மோதல் தொடர்பாக, மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்
அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடை பாரில், நேற்று முன்தினம் இரவு
வக்கீல் ஜெயச்சந்திரன் உட்பட ஆறு வக்கீல்கள் மது அருந்தினர்.
அவர்கள்
அருகில், சேலம் டவுன் மண்டை பாபு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக
கருதப்படும் பிரபல ரவுடிகள் ஷாஜஹான், மோக்குபாபு, சக்திவேல் ஆகியோர் மது
அருந்தி உள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.இந்த வாக்குவாதம் மோதலாக மாறியதால், அவர்கள் ரோட்டுக்கே
வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் வக்கீல் ஜெயச்சந்திரனுக்கு பலத்த காயம்
ஏற்பட்டது. தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து
விசாரணை நடத்தினர்.இந்த மோதலில் ஈடுபட்ட ஷாஜஹான், மோக்கு பாபு, சக்திவேல் ஆகியோரை செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் சபிபுல்லா கைது செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.