Advertisement
லோக்பாலுடன் எனது போராட்டம் முடியவில்லை : அன்னா ஹசாரே உறுதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,08:19 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 21,2013,08:43 IST

உன்னவ் : ஜன் லோக்பால் விவகாரத்துடன் தனது போராட்டம் முடியவில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் அரசின் கல்லூரிகளுக்கிடையேயான கிஷன் மகாபஞ்சாயத் விழாவில் உரையாற்றிய ஹசாரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹசாரே பேச்சு :



ஜன் லோக்பால் விவகாரத்துடன் எனது போராட்டம் முடியவில்லை; விலக்கும் உரிமை மற்றும் திரும்ப பெறும் உரிமைக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கும் வரை எனது போராட்டம் தொடரும்; 2014 லோக்சபா தேர்தலுக்கு முன் 6 கோடி மக்களுக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்; எனது இந்த முயற்சிக்கு பின்னர் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் மேல் மக்களிடமும், நாட்டிலும் மாற்றம் வரும்; கறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாட்டுக்காக தங்களை தியாகம் செய்யும் மனப்பான்மை வரும்; சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் நாட்டின் விவசாயிகளிடம் எவ்வித மாற்றமும் வரவில்லை; நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே மாற்றம் வந்துள்ளது; விவசாயிகளின் நிலை மாற வேண்டுமானால் கிராம பஞ்சாயத்துக்கள் கூடுதல் உரிமைகளையும், அதிகாரங்களையும் பெற வேண்டும். இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார்.

சட்டங்களில் மாற்றம் :



மத்திய மற்றும் மாநில அரசுகள், நிலம் கையப்படுத்துதல், நீர் மற்றும் வனப்பகுதிகள் கையப்படுத்துதல் ஆகியவற்றிற்கு கிராம பஞ்சாயத்துக்களின் அனுமதியை பெற வேண்டும் என சட்டங்கள் கொண்டு வர வேண்டும்; மக்கள் தங்களின் அதிகாரங்களையும், சக்தியையும் புரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் டில்லி உள்ள பார்லிமெண்ட்டை விட மாநிலங்களில் இருக்கும் மக்களின் மன்றம் பெரியது. இவ்வாறு தெரிவித்த ஹசாரே லோக்பால் வரைவு குழுவில் மக்களையும் சேர்க்க வேண்டும் என்ற ஹசாரேவின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் கபில் சிபில் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.

வி.கே.சிங் பேச்சு :



முன்னதாக விழாவில் பேசிய முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றதாழ்வுகள் நக்சலிசத்தின் ஆனிவேராக உள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடந்த 22 ஆண்டுகளில் நாட்டில் 270 மாவட்டங்களில் நக்சலிசத்தை பரவச் செய்துள்ளதாகவும், 2010ம் ஆண்டு சட்டீஸ்கரில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பின் நக்சல்களை பழிவாங்குவதற்காக அரசு ராணுவத்தை பயன்படுத்தி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாப்பதற்காக மட்டுமே எனவும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (17)
K.RAMAN. - chennai,இந்தியா
21-பிப்-201314:42:36 IST Report Abuse
K.RAMAN. வடிவேலுவின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.நானும் ஜெயிலுக்கு போயிட்டேன்.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Regupathy Ragavan - Bengaluru,ஐஸ்லாந்து
21-பிப்-201313:33:31 IST Report Abuse
Regupathy Ragavan சும்மா.. காமெடி பண்ணிக்கிட்டு.. போங்கையா..
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
21-பிப்-201313:02:25 IST Report Abuse
Pugal 2 நாள் ஹர்த்தால் பற்றிய செய்தியின் கருத்து சொல்லும் போது, எங்கே இந்த ஹசாரேவைக் காணோமே என்று நேற்று தான் எழுதினேன், இதோ வந்துவிட்டார். டுபாக்கூர் ஆசாமி. கையில் காசு காலி போல, உண்ணாவிரதம் என்று சொல்லி நன்கொடை என்ற பெயரில் வசூல் ஆரம்பிக்க மீண்டும் வருகிறார். அநேகமாக நாளை அல்லது மறுநாள் கேஜ்ரிவால் மெல்ல தலையைத் தூக்கிப் பார்த்து எதாவது ஒரு அறிக்கை விடுவார்.
Rate this:
5 members
0 members
15 members
Share this comment
arul - dubai  ( Posted via: Dinamalar Windows App )
21-பிப்-201312:55:35 IST Report Abuse
arul தங்களுக்கு இருந்த ஆதரவு போய் விட்டது உங்கலை நம்பி.
Rate this:
2 members
0 members
10 members
Share this comment
PRAKASH - chennai,இந்தியா
21-பிப்-201311:31:06 IST Report Abuse
PRAKASH அய்யா உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் தங்கள் எங்கு இருந்தீர்கள்.. இப்போதுதான் முதன் முறையாக ஊழல் நடக்கிறதா ?? சென்று ஓய்வு எடுங்கள் அய்யா @
Rate this:
11 members
0 members
5 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
21-பிப்-201311:10:47 IST Report Abuse
Guru உங்களை சுற்றி இருந்த கூட்டம் கலைத்து போய் வெகு நாட்கள் ஆனதை நீங்கள் இன்னும் கவனிக்க வில்லையா
Rate this:
9 members
0 members
15 members
Share this comment
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
21-பிப்-201311:02:50 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM தாத்தா..........தாத்தா ........நீங்கள் ........எங்களுக்காக.......உண்ணாவிரதம் ........இருந்து .........உடம்பை ......வருத்தி கொள்ளாதீர்கள் ...........
Rate this:
4 members
0 members
17 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
21-பிப்-201310:52:10 IST Report Abuse
Guru போங்கசார் உங்களுக்கு வேற வேலையில்லை,..
Rate this:
7 members
0 members
14 members
Share this comment
mannaibharathi - kattumannarkoil,இந்தியா
21-பிப்-201310:49:26 IST Report Abuse
mannaibharathi ஒரு காலத்தில் இவருக்கு ஆதரவாக எண்ணற்ற கருத்துகளை இங்கே பார்க்க முடிந்தது. இப்போது?? ஆகாவே.. மக்கள் யாரேனும் தலைமை ஏற்க வரமாட்டார்கள என ஏங்கி ஏங்கி ஏமாந்தே போகிறார்கள்..
Rate this:
0 members
2 members
5 members
Share this comment
Raj - Tuticorin,இந்தியா
21-பிப்-201310:48:32 IST Report Abuse
Raj தலைவா நீ ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும். அப்பா தான் மவுசு. இல்லன்னா பப்பு வேகாதுங்கோய்.
Rate this:
5 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.