சென்னை: கொலை வழக்கில் கைதாகியுள்ள தளி எம்.எல்.ஏ. மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியின் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ.ராமச்சந்திரன்.இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெரியார் திராவிடர் கழக பிரமுகர் பழநி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதானார். இவர் மீதுகுண்டர் சட்டமும் பாய்ந்தது. குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராமசந்திரன் உள்பட 17 பேர் மனு செய்திருந்தனர். இம்மனு இன்று நீதிபதி பாஷா தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. இதில் குண்டர் சட்டம் தொடர்பான ஆதாராங்கள் இல்லாத காரணத்தால் ராமசந்திரன், உள்ளிட்ட 17 பேர் மீது குண்டர் சட்டத்தினை பிறப்பித்த கலெக்டர் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவி்ட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.