Advertisement
காஞ்சியில் மணல் திருடர்கள் தப்பி ஓட்டம்: மாட்டு வண்டிகளை ஓட்டி சென்ற காவலர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,23:05 IST

காஞ்சிபுரம்: மணல் திருடர்கள் மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றதால், மணலுடன், வண்டிகளை போலீசார், காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றில் லாரிகள் மூலம் மணல் திருட்டு அரங்கேறி வந்ததை, காவல் துறை,பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், கூட்டு நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், மாட்டு வண்டிகள் மூலம் ஆற்றில் மணல் எடுத்து வந்து, மறைவான பகுதிகளில் கொட்டி வைத்து, லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணலை ஏற்றி செல்லும், லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் "காவலர்கள் கண்களில் சிக்காமல்' குறுக்கு வழிகளில் சென்று, விற்பனை செய்து "காசு' பார்த்து வருகின்றனர்.
டோக்கன் முறை: இதுபோன்ற திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுப்பணித் துறை, காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்றில், மணல் எடுக்க செல்லும் மாட்டு வண்டிகளுக்கு, ஒரு நடைக்கு, 46 ரூபாய்க்கான டோக்கனை வழங்கி வருகிறது. இதனால், அரசுக்கு வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், சில மாட்டு வண்டிக்காரர்கள் ஆற்றின் குறுக்கே நுழைந்து, அத்துமீறி மணலை ஏற்றி வருவது தொடர்கிறது.
தப்பி ஓட்டம்: காவலர்கள், பொதுப்பணித்துறையினர் நேற்று காலை 9:00 மணிக்கு செவிலிமேடு சுடுகாடு அருகே ரோந்து சென்றனர். காவலர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதை, கைப்பேசி மூலம் அறிந்து கொண்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள், தங்களது மாட்டு வண்டிகளை ஆற்றில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். ஆறு காவலர்கள், மணலுடன் மாட்டு வண்டிகளை செவிலிமேடு, தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக தாலுகா காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்றது,பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
BLACK CAT - Marthandam.,இந்தியா
22-பிப்-201310:17:15 IST Report Abuse
BLACK CAT இனி போலீஸ் வேலை க்கு செல்பவர்கள் மாட்டு வண்டியும் ஒட்ட தெரிந்து இருக்க வேண்டும் போல .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Audith Audithkumar - chennai,இந்தியா
22-பிப்-201307:17:07 IST Report Abuse
Audith Audithkumar அய்யா இன்ஸ் அய்யா, ஆத்துல மணல காணலைய்யா காணூம்... இது வடிவேலு.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Audith Audithkumar - chennai,இந்தியா
22-பிப்-201307:06:37 IST Report Abuse
Audith Audithkumar பாலாறில் லாரி லாரியாக மணல் கொள்ளை நடந்த முடியவில்லை, மாட்டு வண்டி மூலம் மணல் சேகரித்து லாரியில் கொள்ளை அடிக்கின்றனர், இது வன்மையாக கண்டிக்க மற்றும் தண்டிக்க வேண்டிய விஷயம். பூனைக்கு எப்போது மணி கட்டப் போராங்களோ? கண் கெட்ட பின் சூரிய வணக்கம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.