ஜனாதிபதி உரையின் போது, தமிழகத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக, ஆவேச குரல் எழுப்பியதால், இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று துவங்கியது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என, இரு சபைகளையும் சேர்ந்த எம்.பி.,க்கள், ஒன்றாக மைய மண்டபத்தில் அமர்ந்திருக்க, காலை, 11:00 மணி அளவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன் உரையை ஆரம்பித்தார்.
அவர், உரையை படிக்க துவங்கியதும், தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க, மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள், திடீரென தங்களின் இருக்கைகளை விட்டு எழுந்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பினர். "ராஜபக்ஷேயை, போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்றும் குரல் எழுப்பினர்.
தமிழக எம்.பி.,க்களின், இந்த திடீர் ஆவேசக் குரலால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் உரையை தொடர முடியாமல், சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பின், சுதாரித்து, தன் உரையை இடைவிடாமல், வாசிக்கத் துவங்கினார். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள், இரண்டு நிமிடங்கள் வரை, கோஷமிட்டு விட்டு, பிறகு அமர்ந்தனர்.அதேநேரத்தில், சிதம்பரம் தொகுதி, எம்.பி.,யான திருமாவளவன் மட்டும், தன் கையில் பேனர் ஒன்றை பிடித்தபடி, தொடர்ச்சியாக கோஷமிட்டபடி இருந்தார்.
இவரைப் பார்த்து, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.,க்கள் பலரும், திடீரென எழுந்து, "தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர்.மூத்த அமைச்சர்கள் சிலர் வந்து, கோஷங்கள் எழுப்பியவர்களை, அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர். இருப்பினும், ஐந்து நிமிடங்கள் வரை, இந்த கோஷங்கள் நீடித்தன. இதனால், சபையில் பரபரப்பு நிலவியது.நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதாலும், அதில், இடதுசாரி கட்சியினர் பங்கேற்று இருப்ப தாலும், ஜனாதிபதி உரையை, நேற்று இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்கள், முற்றிலும் புறக்கணித்து விட்டனர். இவர்கள் மைய மண்டபத்திற்கு வராமல், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இலங்கையில் பெரிய முதலீடுகள் செய்துள்ள நம்ம ஊரு பணக்கார முதலைகள்தான் அரசியல்வாதிகள் ராஜபக்சேவை ஆதரிக்கக் காரணம் (சிங்களர்களே வடஇந்தியாவிலிருந்து சென்றவர்கள் எனும் ரத்த பாசமும்தான்) அவர்களை தமிழகத்தை விட்டு வெளியேறும் திராணி நமக்கு உண்டா? வெற்று கோஷங்கள் சிங்களர்கலையோ அவர்களால் பலனடையும் சோனியா கூட்ட்தினரையோ மாற்றது . இங்கு மிச்சம் மீதி உள்ள இந்தியத் தமிழர்களையாவது காப்பாற்றிக் கொள்வோம்
"ஏண்டா போக்கிடம் கெட்டவனுங்களா நான் நிதி மந்திரியா இருந்தப்ப எத்தன தபா போன் போட்டு உன் தலைவனோட பேசி இருப்பேன், எத்தனை முறை இலங்கைக்கு போறதுக்கு முன்னாடி கோபாலபுரம் போயி பெர்மிஷன் வாங்கியிருப்பேன், இப்ப வந்து இப்படி இங்க கூவுறீன்களே நீங்க கில்லாடின்னு நினைப்பா" - இப்படித்தான் அந்த இரண்டு நிமிடங்கள் திமுகவினர் கோஷமிட்டபோது முகர்ஜி எண்ணியிருப்பார். கொலை செய்துவிட்டு சுண்ணாம்பு தடவும் வேலை எல்லாம் மக்களிடம் இனி எடுபடாது. இங்கிலாந்து சேனல் 4 டிவியின் அதிரடி ஈழ படுகொலை காட்சிகள் தற்போது மக்களை உறைய வைத்துள்ளது. மக்கள் இந்த போர் குற்றத்துக்கும் இன்றைய ஈழ தமிழர்களின் அவலத்துக்கும் யார் காரணம் என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். அதிமுக நிலைப்பாடு என்றென்றுமே ராஜீவ் மரணத்துக்கு பின் LTTE க்கும் பிரபாகரனுக்கும் எதிரான நிலைதான். அதே சமயம் அவர்கள் என்றுமே ஈழம் மலருவதற்கோ ஈழ தமிழர்களுக்கோ எதிரான நிலையை எடுத்ததில்லை. வெறும் வாக்கு வாதத்துக்காக எதிரணியினர் என்ன வேண்டுமாளாலும் திரித்து கொள்ளலாம். எனவே தற்போதைய நிலையில் கூட்டுக்கொளைகாரர்கலான காங்கிரஸ், திமுக, திருமா....ஆகியோர் இலங்கை ஈழ தமிழர்கள் விஷயத்தில் ஆதரவாக பேச யோக்கியதை இல்லை. இந்த விஷயத்தை திமுக கையில் எடுத்து கபட நாடக ஆடுவதை நிறுத்த வேண்டும். தற்போது டேசோ என்று கூப்பாடு போடுவது மறந்திருக்கும் மக்களை நினைவூட்டி வெரியூட்டுகிறது. திமுகவின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், கொலை, கொள்ளை, மத்திய அரசு, மாநில அரசு அதிகாரங்கள் எல்லாம் பறிபோக போகிறது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.