விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் மாசிமக உற்சவத்தில், பழமலைநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனி வருக்கு அருள்பாலித்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேசுவரர், விபசித்து முனிவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று, 6ம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 11:15 மணிக்கு பழமலைநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விநாயகர் மூஞ்சூரு வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை பழமலை நாதர் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவர் ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.