புதுடில்லி : "கடந்த ஆறு ஆண்டுகளில், 44 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தானாக முன்வந்து ஓய்வு பெற்றுள்ளனர்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்
கீழ், விடுக்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு அளித்துள்ள பதில்: கடந்த ஆறு ஆண்டுகளில், 2007ல், 19 பேர்; 2008ல், ஒன்பது பேர்; 2009ல், மூன்று பேர்; 2011ல், இரண்டு பேர் மற்றும் 2012ல், 11 பேர் என, மொத்தம், 44 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தானாக முன்வந்து ஓய்வு பெற்றுள்ளனர்; 2010ல் யாரும், வி.ஆர்.எஸ்., பெறவில்லை. வி.ஆர்.எஸ்., பெறும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மூன்று மாதங்களுக்கு முன், அதற்கான நோட்டீஸ் அளிக்க வேண்டும். வி.ஆர்.எஸ்., பெற்றவர்கள் எல்லாம், நாட்டின் பல்வேறு பகுதிகளில், உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள். உயர் பதவிகள், 1,885 உட்பட, நாட்டில்
மொத்தம், 6,154 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் உள்ளன. இவ்வாறு, மத்திய அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சொத்து சேர்த்து விட்டு வெளியே வந்தார்களா அல்லது பதவியில் சேர்ந்தவுடனே வெளியே வந்தார்களா? பென்சன் வந்த பிறகு வெளியே வந்தார்கள் என்றால் வாழ்நாள் முழுவதும் பல லட்சம் சம்பளம் தனியார் துறைகளில் பல கோடியில் சம்பளம் பிறகு என்ன? மேலும் இவர்கள் எந்த எந்த துறைகளில் வேலை பார்த்தார்கள் என்று இருக்கிறது. ஒரு சாதாரண வீடு காலி செய்யும் பொருட்களை மூட்டை கட்டி வாகனத்தில் ஏற்றி புது வீடுகளில் இறக்கி வைக்கும் பணியில் இருந்த ஒருவர் இன்றைக்கு யாருமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பல கோடி வருமானம் ஈட்டி வருகிறார், உலகம் முழுவதும் இவருக்கு கிளைகள் உள்ளன, துபாய் மன்னரைப்போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வேறு எங்குமே இல்லை நம் சென்னையில்தான் .. இப்படி இருக்க ஒரு ஐ எ எஸ் வெளியே வருகிறார் என்றால் ..? ஏதோ வேலை இல்லாமல் வந்து நம்மைப்போல் ஒரு வேளை சொற்றிர்க்கே வழி இல்லாதது போல் கூறவேண்டாம் .. இவர்கள் ஆள்பவர்களை விட மிக அதிகம் பொருள் ஈட்டவே வந்திருப்பார்கள், ஒரு சிலர் ..... இந்த காரணங்களுக்காக வந்திருக்கலாம், எப்படி இருந்தாலும், இன்றைக்கு அரசுக்கும் நிறுவனத்திற்கும் ஒரு புரோக்கர் தேவை, அது ஒரு இந்நாள் அல்லது முன்னாள் அதிகாரியாக இருந்தால்??? வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.