இந்தூர்:சமையல் செய்ய காஸ் சிலிண்டர் ஏற்பாடு செய்யாததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனை சுட்டுக் கொன்றார்.மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் ஆசிப் கான்; லாரி ஒட்டுனர். இவரது மனைவி நாஜியா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக, அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, இவர்களின் வீட்டில், சமையல் காஸ் தீர்ந்து விட்டது. வேறு சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யும்படி, நாஜியா பல முறை கேட்டும், ஆசிப்கான் அதை காதில் வாங்கவில்லை. இதனால், கடும் கோபத்தில் இருந்த நாஜியா, நேற்று காலை, தன் கணவன், ஆசிப்கானை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று, நாஜியாவை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:ஆசிப்கான், ஏற்கனவே திருமணமானவர். இரண்டாம் தாரமாக, நாஜியாவை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையேயான உறவு, கடந்த சில நாட்களாக சரியில்லை. நேற்று முன்தினம் இரவு, காஸ் தீர்ந்து, சமையல் செய்ய முடியாமல், பசியுடன் படுக்க நேரிட்டதால், கடும் கோபம் அடைந்துள்ள நாஜியா, நேற்று காலை, கணவனை சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை மிரட்டியுள்ளார். அந்த துப்பாக்கியே, அவருக்கு வினையாகி விட்டது. லாரி ஓட்டுனரான ஆசிப் கானுக்கு, துப்பாக்கி எப்படி கிடைத்தது என, விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த செய்தியை வெறும் வேடிக்கையாக நினைக்காமல், உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள்.. அவன் எங்காவது சாப்பிட்டு வந்திருப்பான். வீட்டில் காஸ் மற்றும் உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள் இல்லை என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கவலையே இல்லை. அவளுக்கும் வெளியே சென்று சாப்பிட்டுவர வழியிருந்திருந்தால், எக்கேடு கெட்டோ போகட்டும் என்று நினைத்து வெளியில் சென்று சாப்பிட்டிருப்பாள். அவன் இவளைப் பழிவாங்குவதாக நினைத்து பட்டினி போட்டுள்ளான். இன்று படித்த ஆண்கள் பலரும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு வீடுகளில் ஸடிஸ்ட் -களாக செயல்பட்டுவருகின்றனர். பசி பொறுக்க முடியாத நேரத்தில் எவ்வளவு ஆத்திரம் வரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.