மதுரை: செங்கோட்டையை சேர்ந்தவர் சமுத்திரக்கனி. இவருக்கும் செந்தில்குமார், பகவதி, மாடசாமிக்கும் இடையே 2004 ல் தகராறு ஏற்பட்டது. இவர்களை இரும்புக்கம்பியால் தாக்கியதில், மாடசாமி இறந்தார். இரும்புக்கம்பியால் தாக்கியது மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக சமுத்திரக்கனிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி கோர்ட் உத்தரவிட்டது. அவர், மதுரை ஐகோர்ட் கிளையில் மேல் முறையீடு செய்தார். நீதிபதிகள் ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜரானார். நீதிபதிகள்,"குற்றத்தை போலீசார் சரியாக நிரூப்பிக்கவில்லை. சம்பவம் கோர்வையாக இல்லை. சாட்சிகள், பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர். கீழ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.