திருநெல்வேலி:நெல்லை சிதம்பர நகர் லெட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வரும் 24ம் தேதி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடக்கிறது.
நெல்லை சங்கர்நகர் செல்லும் வழியில் கொம்பு ஆபீஸ் பஸ்ஸ்டாப் அருகேயுள்ள சிதம்பர நகரில் லெட்சுமி ஹயக்ரீவர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயம் போக்கவும், தேர்வில் அதிக மார்க் பெறவேண்டியும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு எழுதும் மற்றும் பிற வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்வு முன்னேற்றத்திற்காகவும் லெட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் அபிஷேக ஆராதனை பகல் 12.30 மணி வரை நடக்கிறது.
ஏற்பாடுகளை அர்ச்சகர் மாதவ பட்டாச்சாரியார் நடத்துகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.