பெரம்பலூர்:
"பெரம்பலூர் நகர பகுதிகளில் நாளை காலை, 9 மணி முதல், மாலை, 5.30 மணி வரை,
மின் நிறுத்தம் செய்யப்படுகிறது' என, தமிழ்நாடு மின்சார வாரிய இயக்கலும்,
காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாளை,
230 கிலோ வோல்ட் தானியங்கி பெரம்பலூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர
பராமரிப்பு பணிகள் நடைபெறவதால், பெரம்பலூர் நகர பகுதிகளான பழைய
பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்
சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி,
பாலக்கரை, புது பஸ்ஸ்டாண்ட், நான்குரோடு, மின்நகர், துறைமங்கலம் மற்றும்
கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர்,
வடக்குமாதவி, இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, சமத்துவபுரம், கே.புதூர்,
செங்குணம், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு, ஆகிய பகுதிகளில்,
நாளை காலை, 9 மணி முதல், மாலை, 5.30 மணி வரை, மின்நிறுத்தம் செய்யப்படும்.