தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், பள்ளி கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் மாவட்ட சுற்றுலா துறை சார்பில், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் தனசேகர் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராம்மனோகர் முன்னிலை வகித்தார்.
பேரணியை தஞ்சை ஆர்.டி.ஓ., காளிதாஸ் துவக்கி வைத்தார். இதில், மாரியம்மன் கோவில் அரசு மகளிர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, அரசு ஆண்கள் பள்ளி முன் நிறைவடைந்தது. பேரணியில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்கள் ஆரோக்கியத்துக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு தட்டிகளை மாணவ, மாணவியர் ஏந்தியும், வழிநெடுக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.
இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சுற்றுலா துறை சார்பில் கண்ணாடி நார் இழைகளால் உருவாக்கப்பட்ட, தலா, ஐந்து அலங்கார குப்பை தொட்டிகளை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் பெரியகோவில் வளாகங்களில் வைக்க, ஆர்.டி.ஓ., காளிதாஸ் வழங்கினார். ஏற்பாட்டை சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.