ஈரோடு:
ஈரோட்டில், பெண்கள், பெண் குழந்தைகள் புறக்கணிப்புக்கு எதிரான பிரச்சார
இயக்கம் சார்பில், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை
கூட்டம் நடந்தது.
மாநில அமைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். ஈரோடு,
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில்
இருந்து, 45க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள், பெண் சிசு கொலை,
பெண்கள் மீதான வன்முறைகள் ஆகியவற்றில் இருந்து பெண்களை காப்பது
குறித்தும், பெண்கள் பாதுகாப்பில் அரசின் பங்கு குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
இந்திய அமைப்பாளர் இளங்கோ, மக்கள் நல்வாழ்வு இயக்கம்
அமீர்கான், தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா உள்பட பலர்
பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.