Advertisement
தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2013,23:30 IST

சென்னை: ""தி.மு.க., தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் மணிவிழாவையொட்டி, தென் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் தென் சென்னை மாவட்டச் செயலர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.

மணமக்களை வாழ்த்தி, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்திற்கு மாத்திரமல்ல, இந்தியாவிற்கு வருகின்ற நெருக்கடிகளையெல்லாம் நாம் தீர்த்து வைத்திருக்கிறோம். தி.மு.க.,வில் பல அணிகள் இருக்கின்றன. சில அணிகள் பிணிகளாக ஆகிவிடுகின்றன. அந்த பிணிகளைப் போக்கி அணிகளாகவே, அணி என்றாலே அழகு என்று தான் பொருள். அணியைப் பிணியாக ஆக்காமல், அதை அணியாகவே இன்றைக்கு வைத்திருக்கும் பெருமை, அந்தப் பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பதை நான் மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன்.


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இவைகளில் கடமை, கண்ணியம் ஆகியவைகள் சிதைந்தாலும் பரவாயில்லை. கட்டுப்பாடு காக்க வேண்டும். அது தான் ஒரு இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற அந்தப் பெரும் உண்மையை தலைமேல்தாங்கி, மனதில் பதித்து இந்த கட்சியை வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் சூளுரை மேற்கொள்ள வேண்டும்.


கட்சி நண்பர்கள், தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்ன தான் உங்களுக்குள் சங்கடங்கள் ஏற்பட்டாலும், வேதனைகள் விளைந்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த கட்சிலே நம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த கட்சியை கட்டிக் காக்க வேண்டியது, இந்த கட்சியின் மானத்தைக் காப்பற்ற வேண்டியது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து, அப்படி செய்தால் தான், நீங்கள் இணைந்திருக்கின்ற அணிக்குப் பெருமை. எந்த அணியாக இருந்தாலும், எதிரிகளைப் பார்த்து, தலைக்குனியக் கூடிய நிலை ஏற்படாமல் வாழ வேண்டும், வளர வேண்டும், கட்சியை வளர்க்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.


திருமணம் செய்து கொண்ட ஒவ்வொரு ஜோடிக்கும் கிரைண்டர், பீரோ, கட்டில், மெத்தை உட்பட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. தென் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில் தேர்தல் நிதியாக, முதல் கட்டமாக 2 கோடி ரூபாய் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.


ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்:



தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மணிவிழாவை ஒட்டி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று, 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இந்த விழாவுக்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்பார் என, கட்சியினர் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவர் வரவில்லை என்பதால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த ஆண்டு நடந்த இலவச திருமண விழாவுக்கு ஸ்டாலின் வரவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஸ்டாலினுக்கு மணி விழா என்பதால், திருமண ஜோடிகளை வாழ்த்த வருவார் என, மணமக்களின் உறவினர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வரவில்லை. தனது பிறந்தநாளையொட்டி, விழா மேடையில் தி.மு.க., முன்னோடிகள் தன்னை புகழ்ந்து பேசுவதை அவர் விரும்பாத காரணத்தினால், திருமண விழாவுக்கு ஸ்டாலின் வரவில்லை என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இன்று காலை, 10:00 மணி முதல், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தொண்டர்களிடம் வாழ்த்துக்களை ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (191)
Nanpan - Pollachi,இந்தியா
01-மார்-201322:40:29 IST Report Abuse
Nanpan தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.But அஞ்சா நெஞ்சன் , தளபதி,பழமொழி?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
C.Sankaranarayanan - Madurai,இந்தியா
01-மார்-201321:35:06 IST Report Abuse
C.Sankaranarayanan ஸ்டாலின் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகள். ஒருமனிதனை அவருடைய பிறந்தநாளில் வாழ்த்துவதுதான் நல்லபண்பு.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-மார்-201303:49:07 IST Report Abuse
Nallavan Nallavanகிருஷ்ணரின் பிறந்த நாளாகக் கருதப்படும் கிருஷ்ண ஜெயந்தியில் அவரைத் தூற்றுவதும் ... ராமரது ராமநவமியில் அவரை இகழ்வதும் .... என்ன தமிழ்ப்பண்பாடோ ???? ...
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
rajan - kerala,இந்தியா
01-மார்-201321:34:21 IST Report Abuse
rajan முதல்ல உங்க நிதி குடும்பம் ஒத்துமையா இருக்கன்னு பாருங்க. அப்புறம் தொண்டர்களுக்கு குவாடர் பிரியாணி போட்டு அவுக பக்கம் உள்ள ஓட்டைய அடையுங்க.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
01-மார்-201321:10:39 IST Report Abuse
Baskaran Kasimani தலைவர்கள் தங்களுக்குள் கோஷ்டிகளை உருவாக்கி சண்டை போடும் பொழுது தொண்டர்கள் என்ன செய்வார்கள்?
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
01-மார்-201320:54:16 IST Report Abuse
ravi ramanujam r தொண்டர்கள் ஒன்றாக இருக்கும் வரை தான் தன் கட்சியை நடத்த முடியும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார் கருணாநிதி.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Shan Velan - Ann Arbor,யூ.எஸ்.ஏ
01-மார்-201320:05:07 IST Report Abuse
Shan Velan மணி விழா காணும் முன்னால் துணை முதல்வருக்கு வாழ்த்துகள்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-மார்-201303:50:34 IST Report Abuse
Nallavan Nallavanபாருங்க ... பாருங்க ... முன்னாள் துணை முதல்வர்-ன்னு சொல்லி அவரை இடிக்கிறீங்க ... ஆரியர்கள் சொல்லிக் கொடுத்துத் தானே நீங்கள் அவரை வருங்கால முதல்வர் என்று அழைக்க மறுக்கிறீர்கள் ????...
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Devanand Louis - Chennai,இந்தியா
01-மார்-201319:48:13 IST Report Abuse
Devanand Louis தி.மு.க., சார்பில், 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இந்த விழாவில் ஏற்கனவே 30 ஜோடிகளுக்கு திருமணமாகிவிட்டது , இப்பொழுது மறுபடியும் கணக்குகாக இந்த 60 ஜோடிகளுக்கு திருமணம் என்று ப்ராடுவேலைகளில் தி.மு.க நாடகமாடுகிறது , 2 - G அடித்த பணத்தை வைத்து இப்பொழுது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று மக்களை ஏமாற்றுகிரார்கல்
Rate this:
3 members
0 members
128 members
Share this comment
Paddy Sundaram - Chennai,இந்தியா
01-மார்-201319:30:47 IST Report Abuse
Paddy Sundaram வீட்டுக்குள்ளே அண்ணன் தம்பிக்குள்ளே மூட்டி விட்டுட்டு வெளியே ஊருக்கு உபதேசம் இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுது என்பார்களோ?
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
ajithkumar - chennai,இந்தியா
01-மார்-201318:58:17 IST Report Abuse
ajithkumar இந்த தமிழ் இன துரோகி கருணா நாடக நடிப்பில் கை தேர்ந்தவர் .... நாளொரு நடிப்பும் நித்தமும் பொய் சொல்லி வாழ்கை கழிந்து விட்டது இவருக்கு .. இவருக்கு மனைவி துணைவி தாரம் எல்லாம் எத்தனைகளோ பல ... இவராலே இவர் குடும்பத்தை ஒற்றுமையாய் வைக்க துப்பில்லை... தொண்டர்களை ஒற்றுமை இருக்க சொல்றார் இந்த தமிழ் இன துரோகி...
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
rajaguru - chennai,இந்தியா
01-மார்-201318:41:12 IST Report Abuse
rajaguru குடும்ப பிரச்சனையால் கடமையை மறந்து விட்டோம் கண்ணியத்தை இழந்து விட்டோம் கட்டுபாட்டை மட்டும் இழந்து விடாதீர்கள் தன் குடும்பத்தினற்கு இடும் அன்பு கட்டளை
Rate this:
1 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.