சென்னை: தே.மு.தி.க., வைச் சேர்ந்த, செங்கம் தொகுதி, எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், தொகுதி பிரச்னை தொடர்பாக மனு அளித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம், புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு என, பல பரபரப்புகள் அரங்கேறி வந்த நிலையில், சப்தமில்லாமல் ஒரு சந்திப்பும், நேற்று தலைமைச் செயலகத்தில் அரங்கேறியது. தே.மு.தி.க.,வின், எம்.எல்.ஏ.,க்களான, சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் மற்றும் தமிழழகன் ஆகிய நால்வர் ஏற்கனவே, முதல்வரை சந்தித்து, அணிமாறிய நிலையில், ஐந்தாவதாக, செங்கம் தொகுதி, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., வான, சுரேஷ்குமார், நேற்று பகல், 12:00 மணிக்கு, முதல்வரை சந்தித்து, தொகுதி தொடர்பான கோரிக்கை மனு அளித்தார். பின், நிருபர்களிடம் சுரேஷ்குமார் கூறுகையில், ""காவிரி நதிநீர் பிரச்னையில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு விவகாரத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, யாரும் செய்ய முடியாத, ஒரு சாதனையை செய்ததற்காக, முதல்வரை பாராட்டி நன்றி தெரிவித்தேன். செங்கம் தொகுதி பிரச்னை பற்றி பேசியுள்ளேன். அது தொடர்பாக, மனுவும் அளித்துள்ளேன்,'' என்றார். இந்நிலையில், இவரை தவிர, தே.மு.தி.க., வில் இருந்து இன்னும், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்திக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விஜயகாந்த்தால் சட்டமன்ற தேர்தலின் போது கட்சி சார்பில் போட்டியிட சீட் மட்டும் தான் கொடுக்கமுடியுமே ஒழிய அவரால் அவரது கட்சி வேட்பாளர்களை தேர்தலில் ஜெயிக்க வைக்க முடியாது என்பதை அவர் கட்சி சார்பில் நின்ற அனைவருமே புரிந்துகொண்டார்கள் என கருதுகிறேன். ஜெயலலிதாவின் வோட்டுவங்கியால் தான் நாமெல்லாம் ஜெயித்தோம் என்றும் அவர்கள் நன்கு புரிந்துகொண்டதால் தான் இந்த நிலை. அதற்க்கு முன் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு , ஒரெஒருவர் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றதையும், மற்ற எல்லோரும் மண்ணை கவ்வியதையும் விஜயகாந்த் வேண்டுமானால் மறந்துவிட்டு இருக்கலாம், ஆனால் இவர்களால் அதையெல்லாம் மறக்கத்தான் முடியுமா?. அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த்துடன் மட்டும் ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நிற்காமல், அவரது மனைவி , மச்சான் இவர்களது அலப்பரையை தாங்கிக்கொள்ளமுடியாமல் ஏராளமானோர் அங்கு புழுங்கிகொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஒன்றுமே இல்லாதபோதே இப்படி குடும்பமே தங்களை ஆட்டிபடைக்கின்றதென்றால், தப்பித்தவறி கொஞ்சம் பவர் ஏதாவது கிடைத்துவிட்டால் இன்னமும் தங்களை கசக்கிபிழிவார்கள் என்று அலறுகிறார்கள் போலிருக்கின்றது. விட்டால் போதும் என்று அங்கிருந்து வெளியேறவே நிறைய பேர் முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது. விஜயகாந்த்துக்கும் அவரது மனைவி, மச்சான் ஆஅகியொருக்கெல்லாம் அரசியல் பாடம் நடத்தி , அரசியல் என்றால் என்ன என்று புரியவைத்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் சமீப காலமாக அவர்கள் போக்கில் பெரிய மாற்றம் தெரியவருவதால் மிகவும் மனம் நொந்து தான் வேறு வழியில்லாமல் அங்கு இருக்கின்றார் என்கிறார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனை சீண்டினால் நம் பொழப்பு நாறிபோய்விடும் என்பது உணர்ந்ததால் விஜயகாந்த்தும் அவர் விஷயத்தில் மட்டும் தன் மனைவி, மச்சான் சொல்வதை கேட்காமல் அவரிடம் அனுசரணையாக இருப்பதாகவும் தெரிகின்றது. கிடைத்த நல்ல வாய்ப்பை தேர்தல் முடிந்த கையேடு , ஜெயலலிதாவை பகைத்துகொண்டதால் கெடுத்துக்கொண்டாகிவிட்டது. ஜெயலலிதாவாவது தாராளமாக சீட்டுகளை ஒதுக்கி கொடுப்பது மட்டுமல்லாது, தன் கட்சி - அடுத்த கட்சி என்கிற பாகுபாடு பார்க்காமல் வெற்றிபெற வைப்பார். கருணாநிதியிடம் பிகு பண்ணி சீட்டுகளை அதிகமாக பெற்றாலும், தன் கட்சி மாவட்ட செயலாளர்கள் மூலமாக சமாதி அல்லவா கட்ட பார்ப்பார். கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்தவர்கள் கதியை நினைத்து கொஞ்சம் கலங்கினாலும், விஜயகாந்த்துக்கு இப்போதைக்கு வேறு வழியும் இல்லை. கருணாநிதியுடன் தான் கூட்டு சேரமுடியும், அப்படி கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்தாலும் அதை எதிர்த்து கட்சியைவிட்டு சிலர் விலகவும் வாய்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது. விஜயகாந்த் இனியாவது விவேகமாக முடிவெடுத்தால் தான் கட்சியை காப்பாற்றமுடியும். என்ன செய்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
சுபம் சீக்கிரம். எவ்வளவு விரைவில் மற்ற எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு வருகிறார்களோ அவ்வளவுக்கு அந்தந்த தொகுதி மக்களுக்கு நல்லது. அது மட்டுமல்ல விஜயராஜ் கூடாரம் விரைவில் காலியானால் அது தமிழக அரசியலுக்கு நல்லது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாசகார காங்கிரசிடம் பெட்டி வாங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்ய கிளம்பிவிடுவார் இந்தாள். ராமதாஸ், வைகோ போல் இந்தாளும் அரசியல் அனாதையாவது அரசியலுக்கு நல்லது.
தமிழ்நாட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எல்லாமே பரபரப்பு தான். அரசியல்வாதிகள் எல்லோருமே பரபரப்பு விரும்பும் பேர்வழிகள் தான். இப்படி இருக்கும்போது பரபரப்புக்கா பஞ்சம்? இதோ இந்த செங்கம் தொகுதி எம்.எல். எ. இருக்கும் இடம் தெரியாமல் பெயர் கூட வெளியே தெரியாமல் இருந்தார். எவ்வளவு நாள் தான் அப்படி இருப்பது? முதல்வரை சந்தித்தால் அதை வைத்து ஒரு PUBLICITY கிடைக்கும். பரபரப்பு ஏற்படும். கட்சிக்குள் இவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். சொல்ல முடியாது இவர் ஓடி போய் விடகூடாது என்று ஒரு செக்யூரிட்டி ஆளை நியமித்தாலும் ஆச்சர்யமில்லை. இவ்வளவு ADVANTAGE இருக்கபோகும் இந்த சந்திப்பை நிகழ்த்தினால் என்ன என்ற நினைப்பினால் நிகழ்ந்த சந்திப்போ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.