Advertisement
இவர் உயிர் பிழைத்திருப்பராக.... - எல்.முருகராஜ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2013,18:28 IST


வழக்கமாக கட்டுரையின் முடிவில் வேண்டுகோள் வைப்பது வழக்கம், ஆனால் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே அந்த வேண்டுகோளை வைத்து விடுகிறேன், சரியாக சொல்வதானால் இது வேண்டுகோள் கூட கிடையாது, உருக்கமான வேண்டுதலாகும்.

இன்று காலை ஐந்து முறை ரத்த வாந்தி எடுத்து, சிறுநீரகம் செயல் இழந்து போய், பேச்சுத்திறன் அற்று கொஞ்சம், கொஞ்சமாக உணர்வுகள் மங்கி, உடல் உறுப்புகள் செயல் இழந்து வரும் நிலையிலும், மதுவிலக்கு கோரி விடாப்பிடியாக உண்ணாவிரதமும், மவுன விரதமும் இருந்து வரும் சசிபெருமாளின் உயிர் அநியாயமாக பலியாகிவிடக்கூடாது என்பதே அந்த வேண்டுதல்.


காந்தி நினைவு நாளான கடந்த ஜனவரி 30ம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பலரும் வருவதும், மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு செல்வதுமாக இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஒரு பெரியவர் காந்தி சிலைக்கு மலர்தூவிவிட்டு, அப்படியே உட்கார்ந்து மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார், விவரம் தெரிந்த போலீசார் பாய்ந்து வந்தனர். அவரை அப்புறப்படுத்த முயன்றனர், ஆனால் முடியவில்லை, பூரண மதுவிலக்கு கேட்டு தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.


பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்டதாகவும், தற்கொலை முயற்சிக்கு முயன்றதாகவும் சொல்லி கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

காந்தி சிலைக்கு வந்தது முதல் கைதாகி சிறை சென்றது வரை, எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவர் சிறை செல்லாமல் தப்பித்துக் கொள்ள ஆயிரம் வழி இருந்தது, ஆனால் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கவே வந்தேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கவே சிறை செல்ல நேர்ந்தது.


இத்துனை உறுதி படைத்த அந்த மனிதரின் சுருக்கமான கதை.

சேலம் மாவட்டம், மேட்டுக்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்த 58 வயதாகும் சசிபெருமாள் ஒரு காந்தியவாதி. பிழைப்பிற்காக சொற்ப கட்டணத்தில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். மது ஒழிப்பில் தீவிரமாக செயல்படுபவர். இதற்காக சேலத்தில் இருந்து சென்னைக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டவர், இது இல்லாமல் ஒகேனக்கல் குடிநீர்ப்பிரச்னை உள்ளிட்ட பொது பிரச்னைகளுக்காக பல்வேறு அறப்போராட்டங்களை மேற்கொண்டவர்.


மதுவால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளையும், பள்ளி மாணவர்களே குடிக்கு அடிமையாகி சீரழிவதையும் பார்க்க சகிக்காமல் ஏதாவது செய்து அரசின் கவனத்தை ஈர்த்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்பதற்காக சென்னை வந்தவர் காந்தி சிலையருகே சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

புழல் சிறையில் அடைத்ததும் மனிதர் ஜாமீன் கேட்டு வீட்டுக்கு போய்விடுவார் என்று பார்த்தால் சிறைக்குள்ளேயும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார், நிலமை மோசமாகவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரை போலீசார் சேசர்த்தனர், அங்கும் அவர் உண்ணாவிரதத்தை தொடரவே அவரை டிஸ்சார்ஜ் செய்து வெளியே விட்டனர்.


வெளியே வந்தவர் மீண்டும் காந்தி சிலைக்கு போய், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார், இந்த முறை போலீசார் அவரை நேரடியாக கொண்டுபோய் பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நாட்கள் ஒடின.

ஊரைப்பிடித்துள்ள மது என்ற நோய்க்கு சிகிச்சை தரவேண்டும் என்று நினைப்பவருக்கு நாம் என்ன சிகிச்சை தருவது என்று குழம்பிப்போன ஆஸ்பத்திரி நிர்வாகம் அங்கு இருந்து அவரை வெளியேற்றியது, கூடவே வந்த போலீசார் பொது இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால் உங்களை கைது செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்தது.


அப்படியா சரி என்று மயிலாப்பூரில் உள்ள நெல்லை ஜெபமணியின் மகன் மோகன்ராஜ் வீட்டிற்கு சென்று வீட்டு வளாகத்தினுள் உண்ணாவிரதத்தையும், கூடவே மவுன விரதத்தையும் தொடர்ந்து வருகிறார்.

மது என்ற அரக்கன் சமூகத்தை கரையான் போல அரித்துவருவது என்னவோ உண்மைதான் ஆனால் அதனை ஒரே இரவில் ஒழித்துவிடமுடியாது என்ற யதார்த்தத்தை அவரிடம் சொன்னதும், ஐந்து அம்ச கோரிக்கையை எழுதி கொடுத்து இதனை அரசு கவனத்தில் கொள்வதாக சொன்னால் கூட தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக எழுதிக்காட்டினார்.


விற்பனை நேரத்தை குறைக்கவேண்டும், பொதுமக்கள் கூடும் இடத்தில் கடைகளை திறக்ககூடாது, மதுவின் தீமைகளை விளக்கும் பாடங்கள் பள்ளிகளில் அமலாக்கவேண்டும், 23 வயதிற்கு உள்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது, மதுவினால் வரும் வருமானத்தில் ஒரு பங்கை மதுவிலக்கு பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற ஐந்து கோரிக்கையை பரீசிலிப்பதாக கூட அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை, எப்படியிருக்கிறார் என்ற எட்டிப்பார்க்கவும் இல்லை.

இதன் விளைவு கட்டுரை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் 32வது நாளான இன்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பெரியவர் சசிகுமாரின் நிலமை மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.


கண்ணில் மட்டும் உயிரை தேக்கி வைத்துக் கொண்டிருக்கும் காந்தியவாதி சசிபெருமாள் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு எழுந்தமர வேண்டும் என்று வேண்டுவதை தவிர நமக்கும் வேறு வழி சொல்ல தெரியவில்லை.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (15)
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
09-மார்-201308:25:38 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஒரு காலத்தில் சாராய கடை என்பது ஊருக்கு வெளியில் தான் இருக்கும், இப்போ என்னவென்றால் கருமம் டி கடை மாதிரி எங்க பார்த்தாலும் இருக்கு, அட்லீஸ்ட் அது மாதிரியாவது பண்ணி தொலைங்க, ஒவ்வொரு ஊருலயும் ரேஷன் கடைங்க என்னவோ வெளியில வெச்சுட்டு டாஸ்மாக் உள்ள வேக்குரானே
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Snake Babu - Salem,இந்தியா
08-மார்-201316:02:47 IST Report Abuse
Snake Babu காந்தியவாதி சசிபெருமாள் அவர்களுக்கு நன்றி, மற்றும் தாழ்வான வேண்டுகோள். நல்லவர்கள் வாழ வேண்டும். தேவை இலாதது வாழும் பொது உங்களுக்கென்ன. சமுதாயம் குடியினால் கேட்டு இருக்கிறது. அதை மாற்றுவது நல்ல உள்ளங்களின் கடமை. ஆனால் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளவேண்டும். உயிர் விலை மதிப்பற்றது. அதை காக்க வேண்டும். சுவரில்லாமல் சித்திரம் தீட்ட முடியாது. என்னுடைய வருத்தம் அப்படியும் மாறாத அரசாங்கம் நம்முடையது. தனிமனித ஒழுக்கம் ஓங்கினால் குடி பிரச்னையை ஒழிக்கலாம். என்னால் சிலரை குடியில் இருந்து மீட்க முடிந்தது. இப்படியே ஒவ்வொருவரும் குடிக்கு எதிராக இருந்கினால். நீங்கள் எதிர்பார்க்கும் சமுதாயம் இனிதே கிடைக்கும். அந்த சமுதாயத்தை காண நீங்கள் இருந்தே ஆகவேண்டும். மீண்டும் கூறுகிறேன் உயிர் விலை மதிப்பற்றது. குறிக்கோள் நிறைவேறாமல் இறப்பதும் கொழைதனமானதே. ஆரோக்கியமாக வாங்க. குடிக்கு எதிராக ஒரு கை பாப்போம். எங்களோடு கை சேர்வீர்கள் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
09-மார்-201308:27:45 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேநல்ல விஷயங்கள் சொல்லியில்லுரீர் பாம்பு பாபு, வாழ்த்துக்கள்...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
venkat Iyer - nagai,இந்தியா
08-மார்-201310:55:22 IST Report Abuse
venkat Iyer இப்போதெல்லாம் மது சாப்பிடும் நே ரம் 24 X 7 ஆகிவிடும் போல் உள்ளது. வாழ்க ஜனநாயகம்.சாரி ......ஜனநாயகம் .நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்க.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
andoniammalle - grigny,பிரான்ஸ்
06-மார்-201314:29:21 IST Report Abuse
andoniammalle மது விலக்கு கொண்டு வந்தால் முதலில் குடும்பங்கள் நன்றாக இருக்கும். பிள்ளைகள் வாழ்வும், எதிர்காலமும் நன்றாக இருக்கும். இதற்காக தன் உயிரையே கொடுக்க முன் வந்த அந்த நல்ல மனிதருக்கு நம் ஒத்துழைப்பும், பாராட்டுக்களும்,நன்றிகளையும் தெரிவிக்கிறோம். அவருக்காக இறைவனிடம் ஜெபிக்கிறோம்.
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
sankar kumar - muscat,ஓமன்
06-மார்-201310:07:54 IST Report Abuse
sankar kumar நிச்சயம் மதுவை ஒழிக்க வேண்டும். மது இளய சமுதாயத்தை சீரழித்து கொண்டி இருக்கிறது. மதுவினால் குற்றங்கள் பல பல பெருகிக்கொண்டே இருக்கும்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
saravanan sagadevan - Chennai,இந்தியா
05-மார்-201310:49:24 IST Report Abuse
saravanan sagadevan ஒரு திரை படம் சம்பத்தப்பட்ட பிரச்னை என்றதும் , நாம் வீதிக்கு வந்து ஆதரவு குடுத்தோம் . ஆனால் இவர் நமக்காக போராடுகிறார் , எத்தனை பேர் இவருக்கு ஆதரவு குடுத்தோம் ? இதில் நான் உட்பட குற்றவாளி தான் .இந்த மாதிரி ஒரு போராட்டம் நடந்தாக எதனை பேருக்கு தெரியும் ?
Rate this:
0 members
0 members
54 members
Share this comment
Guru - Madurai,இந்தியா
03-மார்-201313:49:26 IST Report Abuse
Guru ஆண்டவர் துணை புரியட்டும்.
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
03-மார்-201305:21:43 IST Report Abuse
naagai jagathratchagan காந்தியின் பெயரை வைத்துக்கொண்டு போலியான வாழ்க்கை வாழும் மக்களிடையே சசி பெருமாள் இன்னுமோர் காந்தி. அவர் உயிர் விடுதல் கூடாது
Rate this:
0 members
0 members
57 members
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-மார்-201302:22:58 IST Report Abuse
GOWSALYA ரொம்ப சரியாச் சொன்னீர்கள் Jay ..Jay ...........zee தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி...."சொல்வதெல்லாம் உண்மை""..அதில் வரும் 95%,பெண்கள் ,தங்களின் குடிகாரக்கணவனின் சித்திரவதைகளைப் பற்றிச்சொல்லி விடுதலை கேட்டு அழுவார்கள்.அந்தப் பெண்களின் கண்ணீரையும், அதனால்,அவர்கள் பிள்ளைகள் படும் வேதனையையும் பார்த்துச்சரி அரசாங்கம் இந்த முறைகளைக் கைகொள்ளுமா????.
Rate this:
1 members
0 members
69 members
Share this comment
Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-மார்-201301:19:03 IST Report Abuse
Matt pillai அவர் ஐந்து கோரிக்கைகள் தேவையான கோரிக்கைகள்ஆக தான் தெரிகின்றன. அவற்றின் நியாங்களை உணர்ந்து கொண்டு அவரின் உயிரை காக்க முயற்சி செய்வதோடு,நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு வாழ்வுக்கு தடைபடும் குடியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர் முயற்சிகலாமே...உடனடியாக அவரின் நிலையை உணர்ந்து அவசர வண்டியை வர செய்து குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று அவரை காப்பாற்ற முயற்சிப்பது ஒரு அரசின் கடமையும் கூட. ...அவர் யார் ?.எதற்காக..அரசை நாடுகிறார் ?...என்பதை விட ....ஒரு உயிரை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் கடமை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்....மது கடைகள் இல்லாமலியே மாநில அரசுகள் செயல்பட்டு கொண்டு இருந்திருகின்றன. ...காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத் மாநிலத்தில் எப்போதும் மது விலக்கு இருந்து கொண்டுதானே இருக்கிறது. அந்த மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியையும் எட்டி இருகின்றதே.
Rate this:
0 members
0 members
46 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.