சென்னை: "சொத்துகளுடன் இருந்தால் சோறு, இல்லையேல், வீட்டை விட்டு வெளியேறு' என்பதாக தான், இன்றைய நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் வசிக்கும் முதியோரின் நிலை உள்ளது.
எழும்பூர் ஹால்ஸ் சாலை சந்திப்பில், ஒரு தம்பதியர், வாழ்வதற்கு பணம் மற்றும் வசதி இல்லாமல், நடைபாதையில் காலத்தை கடத்தி வருகின்றனர். அவரது பெயர் ராமதாஸ், 85. அவரது மனைவி கஸ்தூரி, 78. இவர்களின் ஒரே மகள் திருமணமாகி, பொழிச்சலூரில் வசிப்பதாக கூறப்படுகிறது. தச்சராக வேலை பார்த்து வந்த ராமதாஸ், செய்ய வேண்டிய கடமையான, மகளின் திருமணத்தை முடித்துவிட்டார். தனக்கென, எந்த சொத்தும் சேர்க்கவில்லை. தற்போதைய ஒரே சொத்து, மனைவியும், முதுகு வலியும் தான். மனைவிக்கு காது கேட்காது. மனைவியின் பேச்சு கணவருக்கு மட்டுமே புரிகிறது. கணவரின் செய்கை, மனைவிக்கு மட்டுமே புரிகிறது. மகளுக்கு தொந்தரவு தர கூடாது என்ற நினைப்போடு, முன் வேலை பார்த்த எழும்பூர் பகுதியில், தனக்கென யாராவது உதவுவர் என்ற நம்பிக்கையில், எழும்பூர் ஹால்ஸ் சாலை நடைபாதையில், ஒரு பாய், சில துணிமணிகளோடு வசித்து வருகின்றனர். பரிதாபப்பட்டு யாராவது தரும் உணவை சாப்பிட்டு விட்டு, வாழ்ந்து வரும் இவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் இருப்பது தான்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இளமை..,இளமை மாற..., முதுமை வரும் நேரம்...,உறவுகளுக்கு பாரம்..,பணம்.., சொத்துக்கள் இருந்தால் தான் நேசம்..,ஒரு சிலருக்கு முதுமை இல்லம் வாசம்.., ஒரு சிலருக்கு இவர்களை போல் தெருவோரம்..,மனித உறவுகள் பிரதிபலன் பார்த்து வளர்வதால் ஒவ்வொரும் இன்றைய இளமையும் நாளைய முதுமையில் சந்திக்கும் போகும் இடர்கள்..,உறவுகள் சரியாக பராமரிக்க மனிதன் கற்றுக்கொள்ளவேண்டும் முதுமையும் இளமையும் அன்போடு ஒன்றாக வாழ வழிபிறக்கும் - பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.