இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில், ஆறாம் வகுப்பு மாணவிக்கு மது பானம் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரன் கைது செய்யப்பட்டுள்ளான். மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு வந்த போது, அவனை பொதுமக்கள், நைய புடைத்தனர்.கடந்த, 2ம் தேதி, பள்ளி சென்று திரும்பிய மாணவியை, ஆயுதப்படை போலீஸ்காரன், லுக்போம் யோங்காம் என்பவன் கடத்தி சென்றான். ஆளில்லாத இடத்தில், அந்த சிறுமியின் வாயில் மதுவை ஊற்றி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள், அந்த கயவனை பிடித்து தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர். மயக்க நிலையில் இருந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; நேற்று தான் அவருக்கு சுய நினைவு வந்தது.இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக, போலீஸ்காரன் லுக்போம் நேற்று, மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். இதை அறிந்த அந்த பகுதி மக்கள், கடும் கோபத்துடன், அவனை சுற்றி வளைத்து தாக்கினர்; இதில், அவன் படுகாயமடைந்தான்.கும்பலிடம் இருந்து அவனை காக்க, போலீசார், வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கும்பலை கலைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.