மதுரை: மதுரை புறநகரில், மூளை வளர்ச்சி குன்றியும், மனநலம் பாதித்தும் "அனாதைகளாக' சுற்றித் திரிபவர்களை, "யு டியூப்' மூலம் உறவினர்கள் கண்டுபிடிக்க, போலீசார் வழிகாட்டுகின்றனர்.மதுரைக்கு வரும் வடமாநிலத்தவர்களில் சிலர், வழித்தவறி, உறவினர்களிடம் இருந்து பிரிந்து, ரோட்டில் சுற்றித் திரிகின்றனர். இதில், சிலரை "சித்தராக' கருதி, மக்கள் குறைகளை அவர்களிடம் கொட்டுகின்றனர். "சித்தரும்' ஏதாவது "உளற', அது எதிர்பாராவிதமாக பலித்துவிட, "எல்லாம் சித்தர்மயம்' எனக்கருதி, மக்கள் பணத்தை கொட்டுகின்றனர். இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி, சிலர் பணவசூலிலும் ஈடுபடுகின்றனர். இருநாட்களுக்கு முன், பழங்காநத்தம் பகுதயில் "பாபா' என்பவரும் கதையும் இதுதான். இவரை நேற்று பிடித்த புறநகர் போலீசார், டாக்டர் சான்று பெற்று, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்க முயற்சி எடுத்துள்ளனர்.பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது:புறநகரில் இப்படி திரிபவர்களை "யு டியூப்' மூலம், உறவினர்கள் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "மதுரை மிஸ்சிங் வெர்சன்' என்று "சர்ச்' செய்தால், வீடியோ மற்றும் போட்டோக்கள் "யு டியூப்பில்' இடம்பெற்றுள்ளன, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.