Advertisement
கோடைக்கு முன் காவிரி நீர் பங்கீட்டு ஆணையம் : பிரதமருக்கு ஜெ., கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 12,2013,23:40 IST

சென்னை :"காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை, கோடை காலம் துவங்குவதற்கு முன், நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன்சிங்கை, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து,பிரதமருக்கு,ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என, பிப்.,22ம் தேதி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.கோடை காலத்தில், கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் தேங்கும் நீரை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை கர்நாடக அரசு கொண்டுள்ளது. கோடை மழை, ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் துவங்கும். இந்நீரை, கர்நாடகம் கோடை கால பயிர்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தின் பங்கை அளிப்பதில்லை.

கோடை காலத்துக்கு பயன்படுத்துவதற்காக, கர்நாடக அணைகளில் நீரை தேங்க விடாமல், கர்நாடகமே பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைத்து, வரும் மே முதல் வாரத்திலிருந்து, நீர் பங்கீட்டை கண்காணித்து, அமல் செய்யவேண்டும்.இதன் மூலம் தான், தமிழகத்தின், 2013-14ம் ஆண்டின் சாகுபடியை உறுதி செய்ய முடியும். எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை அமைக்க, மத்திய நீர்வள துறைக்கு உத்தரவிட வேண்டும் என, மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (23)
Krishnagiri Karthikeyan - Krishnagiri,இந்தியா
13-மார்-201319:31:52 IST Report Abuse
Krishnagiri Karthikeyan சூப்பர் அம்மா, மத்தவங்க எல்லாம் சும்மா...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Kannan D - chennai,இந்தியா
13-மார்-201317:43:17 IST Report Abuse
Kannan D திமுக இலங்கை போர் நிறுத்தம் கோரி மத்திய அரசு உடனே நிறைவேற்றியது இப்போ முந்தி கொண்டு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்றத்தில் பேசி அதையும் நிறைவேற்றிவிடுவர்கள் என்று நம்பும் யாரும் பகல் கனவு காண்பவர்கள். இன்றைய நிலைமையில் திமுக - வால் மத்திய அரசை நிர்பந்திக்க முடியாது என்பது நிதர்சனம்.எனவே எதார்த்த நிலையை உணர்ந்தவர்கள் முதல்வர் எடுக்கும் முயற்சியை விமர்சிக்க மாட்டார்கள். ka
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
13-மார்-201315:46:33 IST Report Abuse
Pannadai Pandian விடாதீங்க. தொரத்துங்க. இப்ப கடிதம் தான் வருது, அப்புறம் சம்மன் கண்டிப்பா வரும்ங்ர பயம் பிரதமருக்கு உண்டு.
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
v j antony - coimbatore,இந்தியா
13-மார்-201313:50:37 IST Report Abuse
v j antony என்னை பொறுத்தவரையில் பிரதமர் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றால் கோர்ட்டின் தலையிடு இருந்தால் தான் முடியும் எனவே முதல்வர் இதை கோர்டின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டும்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
ksv - chennai,இந்தியா
13-மார்-201310:49:26 IST Report Abuse
ksv வெறும் பேச்சு காற்றில் போகும் நண்பரே எனவேதான் எழுத்து மூலம் பிறகு கோர்ட் கருணா ஏன் கடிதம் எழுதவில்லை ஒ அவர் கதை வசனம் எழுதுவதில் பிசியோ
Rate this:
8 members
0 members
5 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மார்-201316:20:40 IST Report Abuse
தமிழவேல் கருணாவும் எழுதினர்... ஆனால் இவர் எழுதினார்....எழுதினார்.... எழுதிக்கொண்டே இருக்கின்றார்.. ...
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Raju Rangaraj - Erode,இந்தியா
13-மார்-201310:34:45 IST Report Abuse
Raju Rangaraj டெசோ அமைப்பினர் இதற்காக ஒரு பந்த் நடத்தலாம்
Rate this:
14 members
0 members
6 members
Share this comment
PRAKASH - chennai,இந்தியா
13-மார்-201309:58:04 IST Report Abuse
PRAKASH கடிதம் எழுதும் பழக்கம் நம் மக்களிடம் தற்போது இல்லாவிட்டாலும் , தாத்தா மற்றும் அம்மாவிடம் இந்த பழக்கம் ரத்தத்தில் ஊறியது ..
Rate this:
3 members
1 members
32 members
Share this comment
சுலைமான் - தோஹா,கத்தார்
13-மார்-201309:28:56 IST Report Abuse
சுலைமான் அப்போ அந்த எட்டுச்சுரைக்காயை GAZETTE - இல் வெளியிட்டதால் ஒரு பயனும் இல்லையா?
Rate this:
5 members
1 members
55 members
Share this comment
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
13-மார்-201307:54:35 IST Report Abuse
Ambaiyaar@raja முதல்வர் இன்னும் இரண்டு கடிதம் போட்டு விட்டு அதற்க்கு பின்பு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தான் தொடரவேண்டும் அப்போ தான் அந்த மேலாண்மை ஆணையம் கிடைக்கும் ஆனால் அதற்க்கு இன்னும் இரண்டு ஆண்டு ஆகும். இந்த நாட்டில் எல்லாமே கோர்ட் தான் நடத்துகின்றது இந்த ஜனநாயகத்தை எல்லாம் இந்த காங் கட்சி வெங்காயத்தை விட கேவலமா மதிகின்றது.
Rate this:
3 members
36 members
12 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
13-மார்-201306:24:34 IST Report Abuse
villupuram jeevithan இந்த இரணாடுகளில் 80 கடிதங்களுக்கு மேல் எழுதி இருக்கிறீர். சென்ற ஆண்டு மட்டும் 50 கடிதங்கள் எழுதி ரிக்கார்ட் படைத்திருக்கிறீர். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று பிரதமர் விஷயத்தில் நம்புவது சரியில்லை. உச்சநீதி மன்றத்திற்கே பெப்பே காட்டுவார் இவர்.
Rate this:
2 members
17 members
15 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.