கொழும்பு : "சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியா எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்' என, இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாகவும், அது குறித்து சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், நாளை துவங்குகிறது. இது தொடர்பான ஓட்டெடுப்பு, வரும் 21ம்தேதி, நடக்கிறது.
இந்த தீர்மானத்தின் போது நடக்கும் விவாதத்தில், தங்கள் நாட்டு தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக, இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கா, ஜெனிவாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, இலங்கை வெளியுறவு செயலர் கருணதிலகா அமுனுகாமா குறிப்பிடுகையில், ""அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, கடைசி நேரத்தில், இந்தியா, எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இலங்கையின் எதிர்பார்ப்பு "நிச்சயம்" அரங்கத்தில் நடக்கும்..இல்லை என்றால்..இந்த போர் நடக்க காரணமானவர்கள் என்று உலகிற்கு காட்டிகொடுக்க இலங்கை தயங்காது. பயம் வருமா..வராதா..? ஏதாவது காரணம் கொண்டு நடுநிலை வகிக்கும்..அல்லது வயிறு உபாதை என்று சொல்லி ஓட்டெடுப்பின் போது ஒதுங்கி செல்லும். இத்தாலியரின் நிலை பரிதாபத்திற்கு உரியது..அவருக்கு அடிமைப்பட்டு ஓர் இனத்தை அழித்த படுபாதக செயலுக்கு துணை போன திமுக நிலையும் "அச்சத்தில்" இருக்கும். போர் குற்றவாளி ராஜபக்ஷே மட்டுமல்ல..இதோ இங்கே உள்ள இருவரும்தான் என்று "போட்டுடைக்கும்" இலங்கையின் ராஜதந்திரத்தில் எலிப்பொறியில் சிக்கிய இந்தியா..மற்றும் தமிழக இனமான தலைவர்..பொறுத்திருந்து பாருங்கள்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.