டேராடூன்: டில்லியில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, மருத்துவ மாணவி செலுத்திய கல்வி கட்டணத்தை, அவர் படித்த கல்லூரி நிர்வாகத்தினர் திரும்ப வழங்கியும், அதை ஏற்க, மாணவியின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லியில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவி, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள, சாய் நிறுவனத்தில், நான்கு ஆண்டுகள் பிசியோதெரபி படித்தார். அவருடைய இறுதி ஆண்டு மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக, நேற்று முன் தினம், அவர் தந்தையும், சகோதரரும், சாய் நிறுவனத்திற்கு வந்தனர். அப்போது, பிசியோதெரபி படிக்க, மாணவிக்காக, அவர் பெற்றோர், நான்கு ஆண்டுகளும் செலுத்திய கல்வி கட்டணம், 1.8 லட்சம் ரூபாயை, கல்லூரி நிர்வாகம் அவர்களிடம் திரும்ப வழங்கியது. அதை ஏற்க மறுத்த, மாணவியின் தந்தையும், சகோதரரும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத, அதே நேரத்தில், நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களுக்கு, அந்தத் தொகையை, கல்வி உதவித் தொகையாக வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். இதன் மூலம், இறந்த மாணவியின் ஆத்மா சாந்தியடையும் என்றும் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.