உடையார்பாளையம்:
மாணவர் சேர்க்கை பேரணியை, தா.பழூர் சேர்மன் துவக்கி வைத்தார்.
உடையார்பாளையம் அருகே ஸ்ரீபுரந்தான் துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் துரைராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர்
ஜெயா வரவேற்றார். பேரணியை தா.பழூர் சேர்மன் ஜெயசுதா துவக்கி வைத்தார்.
பஞ்சாயத்து தலைவர் கலாவதி, கல்வி மேலாண்மை மையக்குழு தலைவர் கவுரி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கனகசபாபதி ஆசிரியர்
பயிற்றுனர்கள், மேகநாதன், பாலமுருகன், மன்ற உறுப்பினர்கள் செல்வி,
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக
சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் அரசு பள்ளியில் மாணவர்கள்
சேர்வதன் மூலம் ஏற்படும் பயன்கள், திட்டங்கள், சலுகைகள் உட்பட, பல்வேறு
நலன் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் சகுந்தலா,
கிருத்திகா, ஜாஸ்மின், கார்த்திகேயன், மோகன்தாஸ் ஆகியோர் பேரணியில்
பங்கேற்றனர். ஆசிரியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பெரம்பலூரில் நாளை "பவர்கட்'
பெரம்பலூர்:
"பராமரிப்பு பணி காரணமாக, நாளை காலை, 9 மணி முதல், மாலை, 5.30 மணி வரை,
மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது' என, தமிழ்நாடு மின் வாரிய இயக்கலும்
காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர்
வெளியிட்ட அறிக்கை: நாளை, 230 கிலோ வோல்ட் தானியங்கி பெரம்பலூர் துணை மின்
நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவதால், பெரம்பலூர் நகர பகுதிகளான பழைய
பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்
சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி,
பாலக்கரை, புது பஸ்ஸ்டாண்ட், நான்குரோடு, மின்நகர், துறைமங்கலம் மற்றும்
கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர்,
வடக்குமாதவி, இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, சமத்துவபுரம், கே.புதூர்,
செங்குணம், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு ஆகிய பகுதிகளில், நாளை
மின் விநியோகம் தடை செய்யப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.