போபால் : மத்திய பிரதேசம் அருகே சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் விவரத்தை கேட்டறிந்துள்ளனர்.
சுவிஸ் நாட்டில் இருந்து சைக்கிள் மூலம் ஒரு ஜோடியினர் இந்தியா வந்துள்ளனர். மத்திய பிரதேசம் டாட்டியா மாவட்டத்தில் வரும்போது 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து புதர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணவன் கண் எதிரே கற்பழித்துள்ளனர். இதில் மயக்கமுற்ற நிலையில் அந்த பெண் குவாலியர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., சோலங்கி கூறுகையில்; இங்குள்ள ராமர் கோயில் அருகே தங்கி இருந்த இந்த ஜோடியினர் ஆக்ரா செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த பெண்ணை கற்பழித்து கணவரையும் தாக்கியுள்ளனர். தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குற்றங்களுக்கான உடனடி தண்டனை சாத்தியமில்லாத சட்டம், சிறைச்சாலை தண்டனைக்குரிய இடமாக கருதாமல் சீர்திருத்த இடமாக பார்க்கும் சட்ட நோக்கம், திருமணம் மற்றும் விவாகரத்து போன்ற நடப்புகள் மிகவும் அதிக விலை கொடுக்கும் சமூக அமைப்பு அதானால் மட்டுமே திருமணம் மற்றும் விவாகரத்து நாள்பட்டு நிறைவேறுவது, இளைங்கர்களுக்கு சரியான வடிகால் இல்லாத இந்த சமூக நிலை மாறினால் மட்டுமே இது போன்ற காரியங்கள் தடுக்கப்படும். வெறும் வாய் சவடாலும் அறிவு ஜீவித்தன ஆய்வுகளும், சட்டங்களும் சரி செய்யக்கூடிய காரியமல்ல இது. மொதல்ல திருமண வாழ்வை வயசை வைத்து மட்டும் பார்க்காமல் இளைங்கர்களின் உணர்ச்சி முதிர்வை வைத்து முடிவெடுங்கள். அதன் செலவுகளை குறையுங்கள். எல்லோருக்கும் எளிமையாக செய்யகூடியதாக ஆக்குங்கள். குழந்தைகளின் தேவைக்கேற்ப பெற்றோர் முடிவெடுக்க அனுமதியுங்கள். அதில் வயது வரம்பு என்று சட்டத்தை நுழைக்காதீர்கள். பொருந்தாத திருமணத்தை பிரிக்கும் வழிமுறையை எளிமையாக்குங்கள், அதை இரு தம்பதிகளுக்குண்டான பிரச்சனையாக மட்டும் கருதுங்கள். இது ஏறத்தாழ 95% காம பிரச்சனைகளை உண்டாக்காமல் தடுக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.