Advertisement
மாணவர்களை அடக்கினால் போராட்டம் வெடிக்கும்: ஈரோட்டில் வைகோ பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,02:40 IST

ஈரோடு: ""தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள், தமிழ் ஈழ பிரச்னைக்காக, ஒரே நேர்கோட்டில், சரியான இலக்கை நோக்கி முறையாக முன்னேறி வருகின்றனர். போலீஸார் மூலம், மாணவர்களை அடக்க நினைத்தால், போராட்டம் வெடித்து திசை மாறும்,'' என, ஈரோட்டில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ஈரோடு ஈ.வி.என்.,ரோட்டில் உள்ள, ம.தி.மு.க., மாவட்ட தலைமை அலுவலகத்தில், மாணவர்களை சந்தித்து, வைகோ பேசியதாவது:ஈழத்தமிழர் பிரச்னைக்காக, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், பல்வேறு நிலை போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இலக்கை நோக்கி முறையாக போராடி வரும், மாணவர்களை தடுக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அண்ணாத்துரை என்பவரை, போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசு, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசு மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தமே, இன்று தமிழத்தில் மாணவர்கள் மூலமாக போராட்டமாக மாறியுள்ளது. அரசியல் சாயமின்றி, முன்னேறி செல்லுங்கள், நாங்கள் பின்னால் பக்கபலமாக வருகிறோம். இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாகவே, வருவாய் கிடைக்கிறது. இலங்கையில், 2006 இந்து கோவில்களை இடித்துவிட்டு, சீதைக்கு கோவில் கட்ட நிதி ஒதுக்கியதாவும், அதற்கு இந்தியாவில் உள்ள, பா.ஜ.வினர், அரசு நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கின்றனர்.மகளிர் தினத்தில் துவங்கிய மாணவர்களின் போராட்டம், நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Cibi Raja - Karur,இந்தியா
20-மார்-201307:14:46 IST Report Abuse
Cibi Raja march forward: capture power
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.