சண்டிகர்:நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாதுகாவலர் 94 வயதில் மரணமடைந்தார். இந்திய சுதந்திரப்போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தினை நிறுவியருமான நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின், பாதுகாவலராக இருந்தவர் பட்சிதார்சிங் (94).இவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் தான் பிறந்த சொந்த ஊரான, அரியானாவின் பதேகாபாத் மாவட்டத்தில் உள்ள மையோந்த் குர்த் கிராமத்தில், வசித்து வந்தார். கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.நேற்று இறந்தார். தகவலறிந்த முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, அவருக்கு இரங்கல் தெரிவித்தார். மறைந்த பட்சிதார் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.