லண்டன்: ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்முதல் செய்வதில்இந்தியா முதலிடம் வகிப்பதாகவும்,அதே நேரத்தில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் பிரிட்டனை சீனா முந்திவிட்டதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.சுவீடனின் ஸ்டாக்ஹோம்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.ஐ.பி.ஆர்.ஐ என்ற சர்வதேச அமைதி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆயுதங்கள் இறக்குமதியில் ஆசிய நாடுகள் தான் முன்னிலையில் உள்ளன.இவற்றில் இந்தியா கடந்த 2003-2007 மற்றும் 2008-12 ஆகிய ஆண்டுகளில் 59 சதவீத ஆயுதங்களை இறக்குதி செய்து உள்ளது. இதன்படி ரஷ்யாவிடமிருந்து 100 எஸ்.யூ.-30 ரக போர்விமானங்களும், பி-81 நீர்முழ்கி போக்கப்பல்களையும் , இஸ்ரேலிடமிருந்து மூன்று ஏ-50 இ.எச். ரக விமானங்களையும்,உலகளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா (12%), சீனா (6%), பாகிஸ்தான் (5%), தென்கொரியா (5%), சிங்கப்பூர் (4%) ஆகும்.
அதே வேளையில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் உலகளவில் சீனா ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (30%), ரஷ்யா (26%),ஜெர்மனி (7%),பிரான்ஸ் (6%),சீனா (5%), தவிர சீனாவிடமிருந்து பாகிஸ்தான் 55 % ஆயுதங்களை இறக்குதி செய்கிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னர் பிரிட்டன் இடம் பெற்றிருந்தது. தற்போது பிரிட்டன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாட்டின் பாதுகாப்பு அவசியமான ஒன்றுதான். ஆனால் நாட்டின் வளர்ச்சி முக்கியமானது. தனி மனித வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி, இதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சி ஒரு பெரிய ஆயுதம் என்று புரிந்து கொள்ள வேண்டும். மனித சக்தியை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டும். நல்ல வழி காட்டுதல் வேண்டும். திரு மோடி அவர்கள் பிரதமராக வர வேண்டும் என்பது பெரும்பாலனவர் எதிர்பார்ப்பு என்பது என் கருத்து. நன்றி....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.