Advertisement
தி.மு.க., விலகல் குறித்து கருத்து கூற சோனியா மறுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,23:39 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 21,2013,10:22 IST

புதுடில்லி: ""இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுயேச்சையான, நம்பகத்தன்மை மிகுந்த, ஒரு விசாரணையை நடத்த வேண்டும்,'' என, கருத்து தெரிவித்துள்ள, காங்., தலைவர் சோனியா, ""ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை, தி.மு.க., விலக்கிக் கொண்டது குறித்து, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை,'' என்றும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில், தி.மு.க., கொடுத்த நெருக்கடி, ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு, இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரம், மத்திய அமைச்சர், பெனி பிரசாத் வர்மாவின் சர்மாவின் சர்ச்சை பேச்சு, உள்ளிட்ட பல விவகாரங்களால், காங்கிரசுக்கும், காங்., தலைமையிலான, மத்திய அரசுக்கும், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, காங்., கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. காங்., துணை தலைவராக, ராகுல் பதவியேற்ற பின் நடக்கும், முதல் எம்.பி.,க்கள் கூட்டம் என்பதாலும், இந்த கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில், காங்., தலைவர், சோனியா, விரிவான உரை நிகழ்த்தினார். அவரது பேச்சில், பல்வேறு விஷயங்களை பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும், இலங்கை தமிழர் விவகாரத்துக்கு, முக்கியத்துவம் அளித்து, அவர் பேசினார்.

அவர் பேசியதாவது:
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, நியாயமான அரசியல் உரிமைகள், தொடர்ந்து மறுக்கப்படுவது, எனக்கு, வேதனையையும், அதிக கவலையையும் அளிக்கிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, சம உரிமை மற்றும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே, காங்கிரசின் நிலைப்பாடு. முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ் ஆகியோரின் காலத்திலிருந்தே, இதை வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில், காங்கிரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குறிப்பாக, இலங்கையில், 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள், மிகவும் கவலையை அளிக்கின்றன.

மீனவர் விவகாரம்:
இதன்காரணமாகவே, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுயேச்சையான, நம்பகத்தன்மை மிகுந்த, ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்துகிறது. ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றதாக அறிவித்திருப்பது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், மிகவும் கவலைக்குரிய விஷயம். தினம் தோறும் நடக்கும், இந்த அவலத்துக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.

தேர்தலை சந்திக்க:
நம்மை, தரக் குறைவான வார்த்தைகளால், விமர்சனம் செய்வதோடு, பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வகையில், தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஊழலை ஒழிப்பதற்காக, காங்., தொடர்ந்து போராடும். லோக்பால் மசோதாவை, விரைவில் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யப்படும். காஷ்மீர் மற்றும் ஐதராபாத்தில், சமீபத்தில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளன. இவ்வாறு, சோனியா பேசினார்.

இத்தாலிக்கு பதிலடி:
காங்கிரஸ் தலைவர் சோனியா பேசுகையில், ""இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற, இத்தாலி கடற்படை வீரர்களை, விசாரணைக்காக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என, இத்தாலி அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது. இது, முறையற்ற செயல். எந்த ஒரு நாடும், இந்தியாவை குறைத்து மதிப்பிடுவதை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில், இந்தியாவுக்கு, இத்தாலி அரசு துரோகம் செய்து விட்டது,'' என்றார்.

பெனி பிரசாத் "ஆப்சென்ட்':
காங்., - எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான, பெனி பிரசாத் வர்மா, "சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளது' என, கூறியிருந்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெனி பிரசாத்தின் கருத்துக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதனால், நேற்று நடந்த, காங்., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், பெனி பிரசாத் வர்மா, பங்கேற்கவில்லை. இதுகுறித்து, பெனி பிரசாத் கூறியதாவது: என்னைப் பற்றி, சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். என் வாழ் நாள் முழுவதும், காங்கிரஸ் கட்சியில் தான் தொடருவேன். அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டேன். காங்., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பேன். இவ்வாறு, பெனி பிரசாத் வர்மா கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (20)
PRAKASH - chennai,இந்தியா
20-மார்-201308:33:05 IST Report Abuse
PRAKASH இனி கூற என்ன இருக்கிறது .. 2014 நெருங்குகிறது .. மூட்ட மூடிச்சலாம் கட்டி வைங்க .. ப்ளைட்டுக்கு டைம் ஆகுது
Rate this:
1 members
1 members
11 members
Share this comment
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
20-மார்-201308:18:23 IST Report Abuse
Ramasami Venkatesan இக்கரையிலிருந்துகொண்டு அக்கரையில் உள்ள நம் தமிழ் மக்கள் நலம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த தீர்மானத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. இலங்கை செய்வதைத்தான் செய்துகொண்டிருக்கப்போகிறது. இதற்கு பாகிஸ்தானே ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு நேரடி தீர்வு கிடையாதா.
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
20-மார்-201307:04:19 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் பிரச்னை புரிந்தால்தானே கருத்துசொல்ல? மெஜாரிட்டி இல்லனா என்ன ? 2 பெட்டி எக்ஸ்ட்ராவா சுயேச்சை எம்பீக்களுக்குக் கொடுத்தாப் போச்சு. மற்றபடி முலாயம், மாயாவதியை சி பி ஐ கவனித்துக்கொள்ளும்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
கபாலி - Faraway Land,அன்டார்டிகா
20-மார்-201306:43:59 IST Report Abuse
கபாலி நடக்கிற டிராமாவுல இந்த அம்மாவுக்கான டயலாக் வரும் நேரம் இப்போ இல்லே.
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
venkat Iyer - nagai,இந்தியா
20-மார்-201306:36:52 IST Report Abuse
venkat Iyer தமிழ் நாட்டு கங்க்கிரஸ்காரர்கள் உப்பு போட்டு சாப்பிடுவார்களே ஆனால் ,ஈழ தமிழர்கள் பிரச்சினையில் தமிழ் மக்கள் சோனியாவை காங்கிரசு தலைவராக இருப்பதை ஏற்கவில்லை என்ற தீர்மானம் கொண்டு வர வேண்டும் .அதுவரை தமிழ் நாட்டில் மனம் உள்ள தமிழன் காங்கிரசுக்கு ஒட்டு போட மாட்டான்.அய்யா ,சிதம்பரம் அவர்களே, அடுத்த வருஷ ம் கிராமத்துல விவசாயம் செய்ய தயாராக இருங்க.கொஞ்ச ஓட்டுல ஜெயிச்சு கேபினட் மந்திரி.நடத்துங்க.கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.ஆகிடுச்சு.நீங்க நினைச்சிங்கன்னா ,தமிழ் நாட்டுக்கு எவ்வளவோ செய்து இருக்கலாமே.அம்மா ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.தன் மானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் இனி காங்கிரசுக்கு ஒட்டு போடக் கூடாது .
Rate this:
3 members
0 members
18 members
Share this comment
sankar - trichy,இந்தியா
21-மார்-201300:47:17 IST Report Abuse
sankarசிதம்பரம் நிதி அமைச்சராக தமிழ்நாட்டுக்கு செய்த விஷயம் சிவா கங்கில் அதிக ATM மிஷின் திறந்தது , இதுக்கு எல்லாம் ஒரு அமைச்சர் ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ramalingam - chennai,இந்தியா
20-மார்-201306:26:40 IST Report Abuse
ramalingam என்ன கருத்து கூற முடியும். ராஜபக்ஷேவை போர் குற்றவாளி என கூறினால் அவரும் தயங்காமல் கையை காட்டுவார் இவரும் தான் என. இவர் உதவியால் தான் தன்னால் இதை சாதிக்க முடிந்ததது என. அடுத்து தி.மு.க ராஜா அவர்கள் 2g ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு பங்கு உள்ளது என கூற தயாராக உள்ளார். தி,மு.க. கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒருவர் காலில் மற்றொருவர் கையிற்றை கட்டிக்கொண்டு காலை வாரிக்கொள்ள பார்கிறார்கள். தமிழ் ஈழ மக்களின் துயரக் குரல் இவர்களை சும்மா விடாது. பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
20-மார்-201306:12:39 IST Report Abuse
T.R.Radhakrishnan ஒரு காலி பெருங்காய டப்பாவின் மாமூலான கருத்து.......தமிழன் கையை கொண்டே தமிழனின் கண்ணை குத்திய சாதனை , இல்லை இல்லை, சாகசப் பெண்மணி......
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
nimmi - Dindigul,இந்தியா
20-மார்-201306:00:34 IST Report Abuse
nimmi பல்லாண்டு ஒதுங்கி கிடந்த அம்மா மீண்டும் வெளிச்சத்திற்கு (limelight) வந்து அரசியலில் புத்துனவு பெற தி.மு.க.வும் காரணம் என்பதை அரசியல் தெரிந்தவர்கள் அறிவார்கள். இதனை மறுப்பதற்கில்லை.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Dhanaraj Ramesh - Keela kolathur, Ariyalur,இந்தியா
20-மார்-201305:22:28 IST Report Abuse
Dhanaraj Ramesh சோனியா கருத்து என்னனா இந்த தமிழ் நாடு தொகுதியில நாம ஜெயிக்கலா என்னா? இப்பதான் நம்ம காங்கிரஸ் கர்நாடகாவுல கொஞ்சம் ஷ்ட்ராங்க இருக்குல்ல அங்க போயி அத்தனை தொகுதியிலேயும் நல்லது செய்யிறோம், தமிழ்நாடுக்கு தண்ணீர் தரமாட்டோம்னு சொல்லி ஒட்டு கேட்ப்போம். கண்டிப்பா அங்க ஜெயிச்சிடலாம்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
20-மார்-201304:49:12 IST Report Abuse
Krish Sami அம்மையாரே, கருத்து கூறவே வேண்டாம் 2014க்கு பிறகு, யாரும் தங்களிடம் கருத்தும் கேட்கப் போவதில்லை. விசாரணைதான் செய்யப்போகிறார்கள் மற்றபடி, காங்கிரஸ் தி மு க இரு கட்சிகளுக்குமே சொல்ல வேண்டியதும் உண்டு. ஸ்ரீ லங்கா தமிழர் பிரச்சனை மட்டும்தானா? தென் தமிழ் நாட்டு மக்கள் மீனவ துயரத்தையும், பெரியாறு துயரத்தையும், தஞ்சை, திருச்சி, நாகை பகுதி மக்கள் காவிரி துயரத்தையும், முழு தமிழ் நாடும் மின்சார துயரத்தையும் (அதன் விளைவாக, கோவை மாவட்ட மக்கள் தொழில் இழப்பு சோகத்தையும்) நினைவில் கொள்ளத்தான் செய்வார்கள். 18/40 வைத்துக்கொண்டு, தி மு க என்ன செய்தது? கடந்த இரண்டு வருடங்களாக, டெல்லி, அரசு தமிழ அரசுக்கு செய்ய வேண்டிய நேர்மையான உதவியையும் செய்து விடக்கூடாது என்பதில் உறுதி காட்டியது. இருவருக்குமே காலம் இடத்தைக்காட்டும் - அது திஹார் என்றே தோன்றுகிறது அடுத்த 'அணி' அங்கேதான் நண்பர்களே
Rate this:
5 members
1 members
70 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.