Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2013,00:39 IST
கருத்துகள் (16)
"இலங்கை உள்நாட்டு பிரச்னையை, எப்படி இந்திய பார்லிமென்ட்டில் தீர்மானமாக நிறைவேற்ற முடியும்?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் மத்திய அமைச்சர் ஒருவர் எதிர்கேள்வி எழுப்பினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது சி.ஐ.டி., காலனி இல்லத்தில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்களின் சந்திப்பு இரண்டரை மணி நேரம் நீடித்தது.
அவர்கள் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இலங்கை அரசு செய்த படுகொலையை இனப் படுகொலையாக அறிவிக்க வேண்டும் என்ற திருத்தங்களுடன் ,தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர்கள் அக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், "கருணாநிதியின் கோரிக்கை முரண்பாடாக உள்ளது' என, ஒரு மத்திய அமைச்சர் கூறியுள்ளார். உடனே பொதுச்
செயலர் அன்பழகன் குறுக்கிட்டு, "எதாவது ஒரு காரணத்தை சொல்லி விடுகிறீர்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த உத்தரவாதமும் தர மாட்டீர்களா?' எனக் கேட்டுள்ளார். உடனே கருணாநிதி, "கிழக்கு தைமூர், தெற்கு சூடான், பாலஸ்தீனம் போன்ற நாடுகளின் உரிமைக்கு, இந்தியா குரல் கொடுக்கும் போது, இலங்கைக்கு மட்டும் ஏன் முக்கியத்தும் அளிக்கவில்லை?' என்ற கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒரு அமைச்சர், "இந்தியாவுக்கு சில கட்டுப்பாடுகள், சில விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதற்கு உட்பட்டு தான் நடவடிக்கைகள் எடுக்க முடியும். உங்கள் கோரிக்கைகளை சோனியாவிடம் தெரிவிக்கிறோம்' என்று குறிப்பிட்டதாக தெரிகிறது.
மற்றொரு மத்திய அமைச்சர், "அப்சல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் தீர்மானத்தை ஏற்க கூடாது என, சபாநாயகரே தீர்மானமாக முன்மொழிந்தார். அனைத்து கட்சிகளும் ஆதரவு

Advertisement
அளித்துள்ளன. எனவே, இலங்கை உள்நாட்டு பிரச்னையை, இந்திய பார்லிமென்டில் எப்படி தீர்மானமாக கொண்டு வர முடியும்?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இப்படி காரசாரமான விவாதம் நடந்த போது, ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரிடம் தொலைபேசியில் மத்திய அமைச்சர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. கூட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தான், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி வந்துள்ளார். அவரது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வரவில்லை என்றும், கனிமொழியை கருணாநிதி அழைத்தார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பொருளாளர் ஸ்டாலினும் வெளியூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு கடைசி நேரத்தில் அக்கூட்டத்தில் பங்கேற்றார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (16)
g.s,rajan - chennai ,இந்தியா
20-மார்-201320:08:19 IST Report Abuse
g.s,rajan Beram Padiyala.
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
20-மார்-201318:23:51 IST Report Abuse
மும்பை தமிழன் ப சிதம்பரம் கலைஞரால் ஜெயிக்க வைக்க பட்டவர். சிதம்பரத்துக்கு இது தான் கடைசி mp
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
RATHINAM.NN - TIRUPUR,இந்தியா
20-மார்-201318:10:21 IST Report Abuse
RATHINAM.NN பிஸ்கட் தீந்து போச்சு ன்னா வேறு என்ன பண்றது.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Saradha Rajamani - bangaluru,இந்தியா
20-மார்-201318:09:27 IST Report Abuse
Saradha Rajamani மூன்று மத்திய அமைச்சர்களும் கருணாநிதியிடம் பேசியது என்ன ? அமைச்சர் நம்பர் .1.தம்பி உனக்கு எவ்வளவு சில்லறை தரனும் . கருணா - 2 ருபைங்க அமைச்சர் நம்பர் 2 .தம்பி உனக்கு எவ்வளுவு சில்லறை தரனும் - கருணா - 2 ருபைங்க அமைச்சர் நம்பர் 3. தம்பி உனக்கு எவ்வளவு சில்லறை தரனும் - கருணா - 2 ருபைங்க அமைச்சர் நம்பர் 1. நான் 2 ருபாய் , இவர் 2 ருபாய் அவர் 2 ரூபாய் ஆக மொத்தம் ஆறு ரூபாய் தரணுமா ? சியர்ஸ் (மூன்று பேரும் அடிக்கிறார்கள் ) கருணா - இல்லைங்க மொத்தமா 2 ரூபாய் தாங்க இப்படித்தான் இவர்கள் பேசி இருப்பார்கள்
Rate this:
3 members
0 members
22 members
Share this comment
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
21-மார்-201315:56:37 IST Report Abuse
Nagarajan, Panagudiதங்களுடைய கருத்து 2ஜி ஊழலில் சம்பாதித்த பணத்தை பங்கு போட்டார்கள் என்கிறீர்கள் அப்படிதானே .............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
20-மார்-201316:11:08 IST Report Abuse
LAX குலாபி: எங்க வீட்ல சாயங்கால டிபன் சமோசா வித் ஆலூ மட்டர். உங்க வீட்ல? நமக்கு சாப்பாடு தானே முக்கியம்.//// சிதம்பரம்: எப்பவுமே (3 வேளையும்) தயிர் சாதம்தான்.// அந்தோ நீ: சிப்சும் புட்டும். தலைவரே.... உங்க வீட்டுல?// கருணா: எந்த வீட்ட கேக்குறீங்க? (மனதுக்குள்: கேக்குறாங்கய்யா டீட்டெயிலு.... எனக்கு எல்லா இடத்துலேர்ந்தும் % தான் வேணும். கமிஷன் & கட்டிங்-அ சொன்னேன்யா.... நமக்கு பணம்தானே முக்கியம்? அது புரியாம வந்துட்டாங்க சாயங்கால டிப்பனுக்கு.... ஹய்யோ... ஐயோ...)
Rate this:
0 members
0 members
112 members
Share this comment
G.Krishnan - chennai,இந்தியா
20-மார்-201312:40:28 IST Report Abuse
G.Krishnan உள் குத்து என்ன நடந்தது என்று யாராவது சொல்லமுடியுமா ?. . . . . . . உண்மையிலேயே இதுதான் பேசினார்களா ? அது சரி... . .இரண்டாம் அலை கற்றை கேசு விஷயம் என்ன ஆச்சு .. . . . . . . .
Rate this:
0 members
0 members
24 members
Share this comment
Arasan - chennai,இந்தியா
20-மார்-201310:52:43 IST Report Abuse
Arasan தி மு க சரியான முறையில் இப்பிரச்சினையை கையாளுகிறது என்றே தெரிகிறது, முதிர்ந்த தலைவர் ஆலோசனைப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் மிகச் சரியாக திமுக செயல்படுகிறது.
Rate this:
46 members
1 members
19 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
20-மார்-201310:27:30 IST Report Abuse
Hari Doss ஐஸ்க்ரீம் தீர்ந்து போச்சு இதற்க்மேல் குச்சியை வைத்துக் கொண்டு என்ன செய்வது அதனால் தான் தூக்கி எரிந்து விட்டானுங்க>
Rate this:
1 members
1 members
39 members
Share this comment
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
20-மார்-201309:25:19 IST Report Abuse
Venkatesan Jayaraman போங்கடாஆஆஆஆஆஆஆஆஆ
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
ajoy. p - erode,இந்தியா
20-மார்-201309:05:47 IST Report Abuse
ajoy. p உனக்கு 50 எனக்கு 50 இவருக்கு 50 ஆக மொத்தம் 150 சியர்ஸ்
Rate this:
1 members
0 members
22 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.