அமைச்ர்கள் இன்று ராஜினாமா:
இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க.அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளனர். இதற்கிடையே தி.மு.க., விலகல் கடிதம் கொடுத்ததையடுத்து, காங். ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்தும், தி.மு.க.வின் கோரிக்கை குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. திருத்தங்களை ஏற்றால் பரிசீலிப்போம் என கருணாநிதி அறிவித்திருப்பதால் இன்றும் திடீர் அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.இலங்கை தமிழர் விவகாரத்தை முன்னிறுத்தி விலகியுள்ளதால், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் புது கூட்டணி உருவாக்கும் வாய்ப்புள்ளது என்ற அரசியல் கணக்கும், தி.மு.க., வகுத்துள்ளது.எச்சரிக்கை:
"அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டு வரவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவோம்' என, மத்திய அரசுக்கு ஏற்கனவே, தி.மு.க., மிரட்டல் விடுத்தது. மேலும், "இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் அமைத்து, குறிப்பிட்ட காலவரையற்றுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ஐ.மு., கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கருணாநிதி, கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.தூதர்கள்:
இதையடுத்து, நேற்று முன்தினம், சோனியாவின் தூதர்களாக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியை,6 முறை மிரட்டல்:
இதுவரை மிரட்டிய தி.மு.க.,: தி.மு.க., இதுவரை, ஐந்து முறை மிரட்டல் விடுத்து, ஆறாவது முறையில்தான், கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., நிலைப்பாடு:
இலங்கை பிரச்னையில், தி.மு.க.,வின் நிலைப்பாடு,- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே கட்டாய நிதி வசூல் நடக்கிறதே அதில் ஒரு பகுதியை இலங்கையில் வாடும் தமிழ் மக்களின் நல வாழ்வுக்கு கொடுப்பாரா நம் தானை தலைவர். தான் பதவிக்கு வருவது அல்லவோ மிக மிக முக்கியம். தேர்தல் என்று வரும்போது இலங்கை தமிழர்கள் நலமா முக்கியம். இதுவும் பாராளுமன்றத்தில் வெளியிலிருந்து ஆதரவு போல் தான் இங்கு இருந்துகொண்டு அங்கு (இலங்கை தமிழர்களுக்கு) ஆதரவு. நாம் எவ்வளவு முட்டாளாக்கப்படுகிரோம் என்று நாம் சிறிது சிந்திப்போமா தேர்தலுக்கு முன்பே.
அன்று கருணாநிதி-யின் உண்ணாவிரத நாடகத்தால் 150000 உயிர்கள் பிரிந்தது
இன்று மாணவர்களின் உண்ணாவிரதத்தால் மரித்த உயிர்கள் உயிர்தேழுகின்றது
தயவு செய்து அரசியல் கட்சிகள் இதனை உங்களுடைய சுய லாபத்திற்காக இந்த மாணவர்களின் உணர்சிகளை அரசியல் வியாபாரம் ஆக்காதிர்கள்
இந்த முடிவினை அந்த நாடகத்தின் போதே நீங்கள் எடுத்திருந்தால்.. உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரியும் என்பதை ஒத்துக்கொள்வோம்
நீங்கள் மட்டும் இந்த துரோகத்திற்கு பொறுப்பு ஆக முடியாது ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இதற்க்கு பொறுப்பு.
ஆதலால் மாணவர்களே.. இந்த அரசியல் வா(வியா)திகளின் நாடகத்தினை கண்டு மயங்கிடாதீர்கள்..
கருணாநிதியின் அரசியல் சானக்கியதனதிற்க்கு மற்றுமொரு எடுத்துகாட்டு . கருணாநிதியின் கழுகு மூளைக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தேசிய அளவில் மரண அடி வாங்கப் போவது தெரிந்துவிட்டது. சமயம் பார்த்து கூட்டணியில் இருந்து கழன்று கொண்டு விட்டார் . கருணாநிதியை போல ஒரு சாணக்கியனை இது வரை தேசிய அரசியல் கண்டதில்லை .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.