Advertisement
தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான்' : பிரதமருக்கு ஜெ., கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2013,23:06 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 20,2013,23:59 IST

சென்னை,: "தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்; அவர்கள் மீது, இலங்கை கடற்படை நடத்தும் காட்டுமிராண்டி தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்' என, பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து, பிரமதமர் மன்மோகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:கடந்த ஒரு மாதத்தில், தமிழக மீனவர்களை நான்காவது முறையாக, இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. கடைசியாக, 19 மீனவர்களைப் பிடித்துச் சென்று, மார்ச் 14ம் தேதி முதல், கோர்ட் காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், தமிழக கடல் பகுதியில், நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.இவர்களை, இரும்பு பைப்கள் கொண்டு தாக்கி விரட்டிய, இலங்கை கடற்படையினர், நேற்று காலை, நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, ஆறு மீனவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், நான்கு மீனவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வரலாற்றின் இடைக் காலங்களில் நடந்த காட்டுமிராண்டி தாக்குதல்கள் போல, இவை நடந்துள்ளன; ஆனால், மத்திய அரசு இலங்கை கடற்படை தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வருகிறது. தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்.எனவே, இத்தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதோடு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (9)
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201302:43:41 IST Report Abuse
தமிழவேல் ராணுவத்த அனுப்புங்கம்மா..
Rate this:
4 members
0 members
49 members
Share this comment
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
21-மார்-201302:40:16 IST Report Abuse
Bala Subramani நம்ம பிரதமருக்கு காது கேக்காது முதல்வர் அவர்களே,இலங்கை தமிழர்களுக்காக போராடுகிற மாணவர்கள் இந்த தமிழக மீனவர்களுக்காக போராடலாம்.தயவு செய்து இதை பெரிது படுத்தி மக்களும்,மாணவர்களும் போராட வேண்டும் இதுவே என் வேண்டுகோள்.
Rate this:
2 members
0 members
57 members
Share this comment
Vettri - Coimbatore,இந்தியா
21-மார்-201302:38:02 IST Report Abuse
Vettri காங்கிரஸ் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் இவர்கள் தமிழக மக்கள் மனதில் தனி தமிழ் நாடு என்ற கோசத்தை எழுப்பாமல் அடங்க மாட்டார்கள் என்றே என்ன தோன்றுகிறது.
Rate this:
3 members
0 members
69 members
Share this comment
virumandi - madurai,இந்தியா
21-மார்-201302:32:32 IST Report Abuse
virumandi நம்மில் யாரும் நம்முடைய விவசாயிகளை கண்டு கொள்வதில்லை, நம் மீனவரின் துன்பத்தை அறியவில்லை நம் மக்கள் பல லட்சம் பேர் இன்னும் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் தான் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள் ..இதே போல் இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் ... இலங்கை தமிழர்களுக்கு போராடுவது போல் நம் தமிழக மக்களுக்கு போராடவில்லையே ...
Rate this:
7 members
0 members
41 members
Share this comment
21-மார்-201302:31:04 IST Report Abuse
கத்திரிக்கு பயந்த கைப்புள்ள "கத்திரி" வெயில்ல மண்ட கொழம்புது.
Rate this:
5 members
0 members
17 members
Share this comment
thala - karaikal,இந்தியா
21-மார்-201302:04:45 IST Report Abuse
thala மாணவர்களுக்கு இலங்கை பிரச்சனை என்றால் என்ன என்பது நம் தமிழ் சினிமாவிலும் தொலைகாட்சியிலும் பார்த்துதான் மாணவர்களுக்கு லேசாக தெரிய வந்திருக்கிறது .. இதே போல் நமக்கு உணவு கொடுக்கும் விவசயிகளுக்ககவும் மற்றும் நம் மீனவர்களுக்க்காகவும் எப்போது மாணவர்கள் போராடுவரர்கள் ...இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பது போன்ற உணர்வு நம் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்காகவும் போராட வேண்டும் என்ற எண்ணம் ஏன் மாணவர்களும் அரசியல்வாதிகளும் வரவில்லை ..? சினிமாவில் அதிகமாக இலங்கை தமிழர்களை பற்றி பேசி அதனின் விளைவு தான் இந்த மாபெரும் போராட்டம் .. நம் தமிழ்நாட்டு ஏழை மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர் அவர்களையும் கொஞ்சம் பார்ப்போமே ..
Rate this:
6 members
0 members
37 members
Share this comment
virumandi - madurai,இந்தியா
21-மார்-201301:53:15 IST Report Abuse
virumandi மீனவர்கள் பிரச்சனைக்கு மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து போராட்டம் நடத்துவார்களா ..? நம் மீனவர்கள் பிரச்னை அண்டை நாட்டு பிரச்சனையாக ஆகிவிட்டது ..இலங்கை தமிழர்கள் பிரச்சனை நம் நாட்டு பிரச்சனை ஆகிவிட்டது ..என்ன கொடும சார் இது ..?
Rate this:
5 members
0 members
39 members
Share this comment
Thangairaja - Dammam,சவுதி அரேபியா
21-மார்-201300:52:40 IST Report Abuse
Thangairaja தமிழக மீனவர்களும் என்றல்ல தமிழர்களும் இந்திய குடிமக்கள் தான் என்று ஜெ. குறிப்பிட்டிருக்க வேண்டும். இப்போதைய நிலையில் தமிழக தமிழர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜெயாவுக்கு ஏற்பட்டிருக்கிறது
Rate this:
2 members
1 members
44 members
Share this comment
tamilnidhi - chennai,இந்தியா
21-மார்-201300:51:46 IST Report Abuse
tamilnidhi தமிழக மீனவர்கள் போன்று வேறு எந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இப்படி வெளிநாட்டு ராணுவத்தால் ஆபத்து நேர்ந்தால், இந்நேரம் அந்த நாட்டு தூதர் விரட்டி அடிக்கப்பட்டு இருப்பார். பொருளாதார தடை உத்தரவு போடபட்டிருக்கும். ஏன் இந்தியாவிலேயே தமிழக மீனவர்கள் போன்று மற்ற மாநில மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், இந்நேரம் விரைவாக தடுக்கப்பட்டு இருக்கும். காங்கிரஸ் அழிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
Rate this:
2 members
0 members
77 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.