புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்தில், 71 வயதான பெண், முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இவர், சிந்தி மொழி பாடப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஜனாதிபதியிடம் பட்டம் பெற்றுள்ளார்.டில்லியை சேர்ந்தவர், உஷா சாஸ்வத்,71, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பின், சிந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். இதன் காரணமாக, சி.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பள்ளி கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான, சிந்தி மொழி இலக்கண பாடத் திட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பு, இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும், 2007ம் ஆண்டு, டில்லி பல்கலையின், சிந்தி துறையில், ஆராய்ச்சி மாணவியாக தன்னை இணைத்து கொண்ட இவர், கடந்த ஆண்டு, ஆய்வை நிறைவு செய்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியிடமிருந்து, உஷா சாஸ்வத், முனைவர் பட்டம் பெற்றார்.அப்போது பேசிய உஷா, ""என் கல்வி தாகம் இனிமேலும் அடங்காது; மேலும் படிக்க உள்ளேன்,'' எனக் கூறி, அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.