பெங்களூரு: ""சுதாகரன் திருமணத்துக்கு வரவேற்பு வளைவு, பந்தல் அமைக்க, நடிகர் சிவாஜி மகன் ராம்குமார், 20 லட்சம் ரூபாய் கொடுத்தார்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சினிமா ஆர்ட் டைரக்டர், கோபிகாந்த் சாட்சியம் அளித்தார்.
பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில், வேலூர் பாண்டுரங்கன், சென்னை ராயப்பேட்டை முத்துமணி, கோவை கே.பி. ராஜூ, ஆகியோர் சாட்சி அளித்தனர்.
சாட்சியம்: கடந்த, 1995 செப்டம்பர், 7ம் தேதி நடந்த சுதாகரன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வரவேற்பு அளிக்க, கட்சி நிர்வாகிகள், 12 பேரிடம், தலா ஐந்து லட்சம் ரூபாய் வசூலித்து, சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி உதவியாளர் ரமேஷிடம், 60 லட்சம் ரூபாய் கொடுத்தோம். இதையடுத்து, சென்னை வளசரவாக்கம் சினிமா ஆர்ட் டைரக்டர் கோபிகாந்த், ""சுதாகரன் திருமண மாப்பிள்ளை அழைப்புக்காக, திருமண மண்டபம் எதிரில் பந்தல், ஆர்ச், வரவேற்பு செட் அமைக்கும்படி, நடிகர் சிவாஜி கணேசன் மகன்கள் ராம்குமார், பிரபு கேட்டுக் கொண்டனர். இதற்காக, ராம் குமார், 20 லட்சம் ரூபாய் கொடுத்தார்,'' என்றார்.
குறுக்கு விசாரணை செய்த அரசு வக்கீல் பவானிசிங், ""நீங்கள் பணம் வசூல் செய்ததாக கூறுவது பொய்,'' என்றார். பின்னர், இவர்களிடம், ஜெயலலிதா வக்கீல் குமார், சசிகலா வக்கீல் மணி சங்கர், சுதாகரன் வக்கீல் பரணி குமார் ஆகியோர் சாட்சிகளிடம் விசாரணை செய்தனர்.
திருவாருர் சாமிநாதன், மதுரை வாடிப்பட்டி ராஜேந்திரன், மதுரை தமிழ் செல்வன், தேனி சுதாகரன், திண்டுக்கல் முருகேசன், நெல்லை முத்துராஜ், துத்துக்குடி அருணாசலம், சிவகங்கை வைரமணி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஆகியோர் சாட்சியமளித்தனர்.
"நாங்கள் தினமும் தினமலர், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ்களை படிப்பது வழக்கம். தினமலர் நாளிதழை கடையில் சென்று வாங்கி வருவோம். நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகைக்கு, 18 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய், 12 ஆயிரம் ரூபாய் ஆயுள் சந்தா கட்டியுள்ளோம். நாளிதழ் வீட்டுக்கே வருகிறது. டிபாசிட்டை திரும்ப வாங்கவில்லை' என, அவர்கள் கூறினர்.
இன்றும் விசாரணை தொடர்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.