புதுடில்லி: டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரில், இரண்டு பேர், ஜாமின் கோரி, கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில், மொத்தம், ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில், ஒருவர் சிறார் என்பதால், அவர் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில், தனியாக நடக்கிறது. மீதமுள்ள ஐந்து பேரில், ராம் சிங் என்பவர் சமீபத்தில், திகார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனால் மீதமுள்ளவர்களில், முகேஷ் மற்றும் வினய் சர்மா என்ற இருவர், தற்போது, ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இதை அவர்கள் இருவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.