மதுரை: ""தி.மு.க., தலைவர் கருணாநிதி நினைத்திருந்தால், 2009 ல், இலங்கை இறுதி கட்டப் போரை நிறுத்தியிருக்கலாம். தற்போது இலங்கை தமிழர் மீது பாசம் வந்தது போல நடிக்கிறார்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சாடினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்னையில், தனி ஈழம்தான் தீர்வு என, 1992 லிருந்து பா.ம.க., வலியுறுத்துகிறது. கடந்த 1985 ல், டெசோ அமைப்பை ஏற்படுத்தி, "தனி ஈழமே தீர்வு' என கருணாநிதி கூறினார். காங்., தலைமையில் கூட்டணியில் இணைந்த பின், தனிஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. இப்பிரச்னையில் தி.மு.க., நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது. இலங்கைத்தமிழர் மீதான அக்கறையினால், காங்., கூட்டணியிலிருந்து, கருணாநிதி விலகவில்லை. மாறாக, அக்கூட்டணியிலிருந்து விலகும் நேரத்தை, பார்த்து கொண்டிருந்தார். தற்போது இப்பிரச்னையை காட்டி, வெளியேறி விட்டார். கருணாநிதி நினைத்திருந்தால், இலங்கை இறுதி கட்ட போரை நிறுத்தியிருக்கலாம். கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள், ராஜபக்ஷேயை சந்தித்து, தமிழர் மறுவாழ்வு குறித்து பேசுவதாக கூறி, விருந்து சாப்பிட்டு, மூடை, மூடையாக பரிசு பொருட்களுடன் திரும்பினர். அதையும் கருணாநிதி பாராட்டினார். தற்போது இலங்கை தமிழர் மீது பாசம் வந்தது போல நடிக்கிறார்.
ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா ஆலோசனையின்படி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தை கொண்டு வருவதால், இலங்கை தமிழருக்கு நன்மை ஏற்பட போவதில்லை. ராமதாஸ் அமைதியை விரும்புவன். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முன் நிற்பவன். இத்தனை ஆண்டுகளாக தென் மாவட்டங்களுக்கு நான் சென்று வந்ததற்கு பின்னால், எந்த கலவரமும் ஏற்படவில்லை. மதுரையில் நுழையக் கூடாது என, எனக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமையில்லை, என்றார்.
காற்றுள்ளவரை கூட்டணி இல்லையாம்!: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து கூறுகையில், ""கார் (மேகம்), கடல், பார்(பூமி), காற்றுள்ளவரை தி.மு.க.,- அ.தி.மு.க., வுடன் கூட்டணி கிடையாது,'' என்றார் ராமதாஸ், திட்டவட்டமாக.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மருத்துவர் கூறுவது இங்கு தினமலரில் கடை கோடி வாசகனும் விமர்சிப்பது தான். அவர் எல்லோருடைய கூற்றையும் ஆதரிக்கிறார். ஒருவேளை இந்நேரத்தில் அன்புமணி மத்திய அமைச்சரை இருந்திருந்தால் மாமனார் கிருஷ்ணசாமி பேச்சை கேட்பாரா அல்லது தந்தை மருத்துவர் பேச்சை கேட்பாரா ??? அல்லது இவர்களும் கருணாநிதி போல நாடகம் போட்டு இப்போதுதான் வெளியே வந்திருப்பார்களா ???
திமுக...அண்ணா திமுக கட்சிகள் கூட்டணிக்காக இவரை அணுகலாம் என்பதை சிம்பாலிக்காக கூறியுள்ளார்...அரசியலில் உள்ளவர்களுக்கு இந்த code புரியும்....சில நேரங்களில் நல்ல கருத்துக்களையும் இவர் துணிவுடன் கூறுவதுண்டு...தனி ஈழம் என்பது சர்வாதிகார நாடாக அமைந்துவிட கூடாதென்பதற்காக சில நேரங்களில் திமுக அமைதி காத்ததுண்டு...இப்போதைய அங்கு நிலவும் சூழ்நிலை தனி ஈழத்துக்கு ஆதரவாக உள்ளது.....
டாக்டரின் துணிச்சல் இது என்பேன். பரவாயில்லை சமயங்களில் சற்று சரியாகவே பேசுகின்றார். ஆனால் ஒன்றே ஒன்றுதான்..என்னதான் காலம் தன்னை மாற்றிகொண்டாலும்..நீங்கள் விடாப்பிடியாய் சாதியை வைத்து அரசியல் செய்வது மட்டும் புரியவே இல்லையே..சொந்த சாதி சனமே உங்களை தோற்கடிக்கும் கேவலத்தை நீங்கள் சந்தித்த போதும் எதற்காக இந்த துணிச்சலான முடிவோ..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.