புதுடில்லி: இந்திய மீனவர்கள் இருவரை, சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர், இன்று இந்தியா வந்தனர்
கடந்த ஆண்டு பிப்வரி மாதம் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இரண்டு மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள், சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக,மிஸிமிலினோ லதோர், சவ்வேதார் ஜிரோம் ஆகிய இத்தாலி வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தாலியில் நடக்கும் தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, இவர்கள் பரோலில் செல்வதற்கு, சுப்ரீம் கோர்ட் நான்குவராங்கள் அனுமதித்தது."ஓட்டளித்து விட்டு, அவர்கள் திரும்ப வந்து விடுவர்' என, இத்தாலி தூதர், டேனியல் மன்சினி அளித்த, உத்தரவாதத்தை அடுத்து, சுப்ரீம் கோர்ட், அவர்களை இத்தாலி செல்ல அனுமதித்தது. இந்நிலையில், "பரோலில் சென்ற இத்தாலி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்துஅவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம். இந்தியாவில் நடக்கும் விசாரணையிலும், அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்' என, இத்தாலி அரசு, சமீபத்தில் அதிரடியாக அறிவித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்படி, இரண்டு இத்தாலி வீரர்களும் இன்று டில்லி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுடன் இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சரும் உடன் வந்துள்ளார். அவர்கள் அனைவரும் டில்லியில் உள்ள இத்தாலி தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த கேடு கெட்டு மானம் கெட்டு பிச்சை கேட்டு அவர்களை வர வைத்த நடவடிக்கைக்கு பெயர் வெற்றியாம் .ராஜ தந்திரமாம்.இனிமேல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இவர்கள் தான் நிர்ணயம் செய்வார்களா? மானத்தை விற்கும் அரசியல்வாதிகள்.இந்த இழி செயலுக்கு பதில் அவர்கள் வராமலேயே இருந்திருக்கலா.சோனியாவால் இந்திய இறையாண்மைக்கும் தீங்குதான்.ஒருவேளை சங்குதானோ?
இவர்களை இப்போது உள்ள கவர்ன்மென்ட் ஒண்ணுமே செய்யாது. இதே கோர்ட்டோட தொல்லையாலதான் நடந்துள்ளது.இங்க வந்த நாங்க ராஜ மரியாதையோட திருப்பி அனுப்புறோம்னு கெஞ்சிக் கூட்டி வந்திருப்பார்கள். இதுதான் உண்மை. குவற்றோஹிக்கு கிடைத்த மரியாதை தெரியாதா உங்களுக்கு ? என்று உதாரணம் கூறியிருப்பார்கள்.இதை எல்லாம் பார்த்த அவர்களுக்கு வரக் கசக்கவா செய்யும்? வந்திருப்பார்கள் . பின்னர் நடக்கப் போவதை நாம் பார்க்கத்தானே போகிறோம்
நண்பன்
இதே வேகத்தை பாகிஸ்தான் border இல் நமது வீரனின் தலையை எடுத்த போது காட்ட வில்லையே ? எந்த அரசியல் வாதியும்.........ஏன் supreme கோர்ட் கூட ரிஸ்க் எடுக்கவில்லையே .....பங்களாதேஷ் ஊடுருவல், காஷ்மீர் ஊடுருவல், சீனா ஊடுருவல், என அனைத்து பகுதியிலுமே குடச்சல்கள்................., தெளிவாக முடிவெடுக்க முடியாததால் தானே? ......... இது எப்படி PM ஐ சுற்றியுள்ள 11 பேர் அணியால் மட்டுமே முடியுமா? ................

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.