பெங்களுரூ:கர்நாடக மாநில பா.ஜ. தலைவராக லோக்சபா எம்.பி. பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டு்ள்ளார். கர்நாடக மாநில பா.ஜ. தலைவராக இருந்த ஈஸ்வரப்பா பதவி விலகினார். இதையடுத்து பா.ஜ. மாநில தலைவராக பிரகலாத் ஜோஷி(50) தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்தார். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே 5-ம் தேதி நடக்கிறது.இதில் லிங்காயத் சமுதாயத்திற்கு முக்கியத்துவத்தும் தரும்வகையில் ஜோஷி நியமிக்கப்பட்டு்ள்ளதாக கர்நாடகா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் இதே சமுதாயத்தினை சேர்ந்த எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில தலைவராக நியமிக்கப்பட்டு்ள்ள பிரகலாத் ஜோஷி, அம்மாநில பா.ஜ.வில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர்.இவர் எடியூரப்பாவி்ற்கு சரியான போட்டியாக திகழ்வார் என அம்மாநில பா.ஜ.வினர் கூறுகின்றனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.