தினமலர் : செய்திகள் : டில்லியில் தமிழ் இசை நிகழ்ச்சி
டில்லியில் தமிழ் இசை நிகழ்ச்சி
அக்டோபர் 27,2009,19:39 IST
புதுடில்லி: தில்லி தமிழ்ச் சங்கமும் மயூர் விகார்-2 கணேஷ் சமாஜும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமழையூர் சதாசிவம் குழுவினரின் கச்சேரி, கணேஷ் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முருகப்பெருமானின் கந்த சஷ்டியன்று சொற்சுவையும் பொருட் சுவையும் கூடிய தேவார, திருவாசக, திருப்புகழ் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. சதாசிவத்தின் சுத்தமான உச்சரிப்பில் தமிழ்ப் பாடல்கள் கேட்டோர் நெஞ்சை நெகிழ வைத்தது. அன்றைய தினம் அவருடன் இணை சேர்ந்த வயலின், மிருதங்க, மோர்சிங் வாத்யங்கள் ஒவ்வொன்றும் பாராட்டத் தகந்த முறையில் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. தில்லி வாழ் தமிழர்கள் பரந்து இருக்கும் இந்த நகரில் தமிழ்ச் சங்கம் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே வந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி மிகவும் பாராட்டத்தகுந்தது. அவர்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் நடைபெற வேண்டும். தமிழ்ச் சங்க கமிட்டி உறுப்பினர்கள் இந்தப் பணியை மேலும் சிறப்புற செய்து, தில்லிவாழ் தமிழர்களின் தமிழ் ஆர்வத்தை, கலாச்சாரத்தை, தமிழின் பெருமையை வளர்க்க வேண்டும்.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல் திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம் திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்
திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்
டீ கடை பெஞ்ச் தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்
டவுட் தனபாலு பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப
செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட் சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்
இன்று சர்வதேச ஹலோ தினம் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&