அயர்லாந்தில் ஞாலம் போற்றும் ஞான முதல்வன் ஆலயம்

அக்டோபர் 13,2008  IST

Comments

தலவரலாறு : அயர்லாந்தின் டப்ளின் பகுதியில் அமைந்துள்ள அழகிய சிறிய ஆலயம், அருள்மிகு விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் 2003 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். அயர்லாந்தில் உள்ள இந்து சமுதாய மக்களின் சீறிய முயற்சியின் பயனாக இக்கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா 2003 ம் ஆண்டு விஜயதசமி அன்று நடத்தப்பட்டது. விஜயதசமி தினத்தன்று விநாயகர், சரஸ்வதி, லட்சுமி போன்ற தெய்வங்களுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கல்ப்பம், கலச பூஜை, அர்ச்சனை மற்றும் ஆரத்திகள் செய்யப்பட்டு, பிரசாத விநியோகமும் நடைபெற்றது. இந்த பூஜையில் சுமார் 225 மக்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் உருவாவதற்கு பக்தர்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடை பெரிதும் உதவிகரமாக இருந்தது. பக்தர்களின் கருத்துக்கள் மற்றும் ஆதரவு இக்கோயில் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் இந்த பூஜையின் போது கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கோயிலில் மாதாந்திர பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. முக்கிய பூஜைகளின் போது அஷ்டோத்திரம், ஆரத்தி, அர்ச்சனை மற்றும் பிரசாத விநியோகம் ஆகியன நடைபெறுகின்றன. சிறப்பு பூஜைகள் நடைபெறும் காலங்களில் மாதம் முழுவதும் கலாச்சார முறையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

கோயில் முகவரி :

Sri Vinayaga Temple,

Ballyroan Community Centre,

Marian Road, Rathfarnham,

Dublin-14.

தொலைப்பேசி : 00353-86-8881905

பேக்ஸ் : 00353-1-6715564

இணையதளம் : http://ivt.ie/

மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாரிசில் விவேகானந்தர் விழா

பாரிசில் விவேகானந்தர் விழா...

பிரிஸ்பேனில் கர்நாடக இசைக் கச்சேரி

பிரிஸ்பேனில் கர்நாடக இசைக் கச்சேரி...

ஆக.,9ல் வான்கோவர் வீதிகளில் தேர் பவனி

ஆக.,9ல் வான்கோவர் வீதிகளில் தேர் பவனி...

குவைத் பாவேந்தர் கழகம் நடத்திய களம் ஒன்பது

குவைத் பாவேந்தர் கழகம் நடத்திய களம் ஒன்பது...

Advertisement
Advertisement

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

புதுடில்லி : வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2012ல் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 6.57 மில்லியன் வெளிநாட்டினர் ...

ஜூன் 18,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us