இந்து-சீக்கிய மதங்களை இணைக்கும் நியூயார்க் சத்யநாராயண மந்திர்

நவம்பர் 21,2008  IST

Comments

தலவரலாறு : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஜாக்சன் ஹைட்ஸ் பகுதியில் அமைந்துள்ளது இந்து மற்றும் சீக்கிய மதங்களை இணைக்கும் அருள்மிகு சத்யநாராயணர் திருக்கோயில். இக்கோயில் குருமந்திர் என்ற சிந்தி கலாச்சார அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த குரு மந்திர் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாராகவும், இந்துக்களின் வழிபாட்டுத்தலமான கோயிலாகவும் விளங்குகிறது. சிந்தி கலாச்சார முறைப்படி அமைந்த இக்கோயிலில் இரு மதத்தினர்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள சத்ழநாராயண மந்திர் பழமையான கோயிலாகவும், இப்பகுதியில் உள்ள ஒரே குருமந்திராகவும் அமெரிக்கர்களால் கருதப்படுகிறது. நியூயார்க் மாகாணத்தில் இந்திய சமூகத்தினர் வளர்ச்சி அடைய துவங்கியதும் வழிபாடுகள் முதலிவற்றை அவர்களின் வீடுகளிலும் வாகனம் பழுதுபார்க்கும் இடங்களிலும் நடத்தினர். சத்ய நாராயணர் கோயில் கட்டுவதற்கான இட உதவி மற்றும் பொருளுதவி ஆகியன பொதுமக்கள், குறிப்பாக சிந்தி சமுகத்தினரிடமிருந்து பெறப்பட்டது. இக்கோயிலில் அஹிம்சா வழி பற்றிய இந்து மத போதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் , சொற்பொழிவுகள் போன்றவைகளும் போதிக்கப்படுகின்றன. மேலும் இக்கோயிலில் பாசுரங்கள் பாடுவது மற்றும் ஆர்வலர்களின் நிகழ்வுகள் போன்றவைகளும் ஊக்குவிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆன்மிகவாதிகள், புரோகிதர்கள் ஆகியோர் பெருமைபடுத்தப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். மேலும் வழிபாட்டுக் கூட்டங்களின் போது அவர்களின் ஆன்மிக சொற்பொழிவுகளும் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன. இக்கோயில் 1987 ம் ஆண்டு நிறுவப்பட்டது.

கோயில் நேரங்கள் :

திங்கள் - வெள்ளி : காலை 7.30 - பகல் 1.00 ; மாலை 4.00 - இரவு 9.00

சனி, ஞாயிறு, விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் : காலை 7.30 - இரவு 9.00

கோயில் முகவரி :

Satya Narayan Mandir,

75-15 Woodside Avenue,

Jackson Heights, N.Y. 11373

தொலைப்பேசி : (718) 899-8863

இ-மெயில் : mandirny@yahoo.com

இணையதளம் : http://satyanarayanmandirnewyork.org

மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பெண்களுக்கு எதிரான கொடு‌மை‌யை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்

பெண்களுக்கு எதிரான கொடு‌மை‌யை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்...

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்...

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...

ஸ்காட்லாந்தில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்காட்லாந்தில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்...

Advertisement
Advertisement

மன்மோகன்- கெகியாங் பேச்சுவார்த்தை

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங், சீனப்பிரதமர் லீ கெகியாங் இடையிலான பேச்சுவார்த்தை டில்லியில் துவங்கியது. நண்பகல் 12.30 மணியளவில் இருவரும் பத்திரிகையாளர்கள் ...

மே 20,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us